மியன்மார் அகதிகள் மிரிஹான முகாமில்


மீண்டும் திருப்பி அனுப்பாதீர் என சட்டத்தரணிகள் கோரிக்கை
இலங்கை வடக்கு கடல் எல்­லையில் கட­லோர காவல் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்ட மியன்மார் ரோஹிங்யா  முஸ்லிம் அக­தி­களை மிரி­ஹான தடுப்­புக்­காவல் முகா­முக்கு இட­மாற்­று­மாறு, மல்­லாகம் நீதிவான் நீதி­மன்ற  நீதி­பதி நேற்று உத்­த­ர­விட்டார். 

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்  அக­திகள் 30 பேரும் இரு இந்­தி­யர்­களும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு இலங்கை கடல் எல்­லை­யூ­டாக  பய­ணித்துக் கொண்­டி­ருந்த போது கட­லோர  காவல் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டனர்.

இத­னை­ய­டுத்து அவர்கள் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு நேற்­று­வரை   விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். 

மியன்மார் முஸ்லிம் அக­திகள் மீண்டும் மியன்­மா­ருக்கு  திருப்பி அனுப்­பப்­ப­ட­மாட்­டார்கள். அவர்­க­ளுக்கு நாடொன்று  புக­லிடம் வழங்கும் வரை இலங்­கையில்  தடுப்­புக்­காவல் முகாமில் வைக்­கப்­பட்­டி­ருப்­பார்கள் என ஆர்.ஆர்.ரி.அமைப்பின் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த 30 ரோஹிங்யா முஸ்லிம்  அக­தி­களும், இரு இந்­தி­யர்­களும் நேற்று யாழ். மல்­லாகம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். பிற­நாட்டில்  குடி­பு­குதல் சட்டம்,  பிரிவு 45Cயின்  கீழ்  யாழ்ப்­பாணம்  பொலிஸார்  இவர்­களை  நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தினர். 

ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் சார்பில் ஆஜ­ரான ஆர்.ஆர்.ரி. அமைப்பின் சட்­டத்­த­ர­ணிகள் ருஷ்தி ஹபீப் மற்றும் சைனாஸ் மொஹமட் ஆகியோர் அக­தி­களை அவர்­க­ளது நாட்­டிற்குத் திருப்­பி­ய­னுப்­ப­வேண்­டா­மென  நீதி­ப­தியை வேண்டிக் கொண்­டனர். 
அக­தி­களை யு.என்.எச்.ஆர்.சியின் (UNHRC) கண்­கா­ணிப்பு  மற்றும் உத­வி­களின் கீழ் தடுப்பு முகாமில் வைப்­ப­தற்கு  சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னை­களை உட­ன­டி­யாக  பெற்­றுக்­கொள்­ளும்­படி நீதிவான் பொலி­ஸா­ருக்கு  உத்­த­ர­விட்டார். 

ஆர்.ஆர்.ரி.அமைப்பு நீதி­வா­னிடம் விடுத்த  வேண்­டு­கோ­ளை­ய­டுத்து,  நீதிவான் அவர்­களை சிறைக்கு  அனுப்­பாது  மிரி­ஹான  தடுப்­புக்­காவல் முகா­முக்கு  அனுப்பி வைக்க உத்­த­ரவு வழங்­கினார்.

அக­தி­க­ளுக்கு  முழு­மை­யான வைத்­திய வச­தி­களை வழங்­கு­மாறும், குறிப்­பாக கர்ப்­பி­ணித்­தாய்க்கு  இந்த வச­திகள் வழங்­கப்­பட வேண்டும் எனவும் நீதிவான் பொலி­ஸா­ருக்குத் தெரி­வித்தார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை  இலங்கை  கடற்­ப­ரப்பில் கைது செய்­யப்­பட்ட 30 மியன்மார்  அக­தி­களில் 7 பெண்கள் 7ஆண்கள் மற்றும் 16 சிறு­வர்கள் அடங்­குவர். மேலும்  இரு இந்­தி­யர்­களும் அடங்­குவர். 

மீன்­பிடி  நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த பட­கொன்றின் இரு இந்திய மீனவர்கள் தமது படகு கடலில் மூழ்குவதற்கு  முற்பட்டபோது தங்களைக் காப்பாற்றி  மீனவர்களின் படகில் ஏற்றியதாக அகதிகள் பொலிஸ் விசாரணையின் போது  தெரிவித்துள்ளனர். இதனையே  இரு இந்திய மீனவர்களும் தெரிவித்துள்ளனர். 

Comments