மாவில்லு வர்த்தமானி விவகாரம் : தீர்வு கிடைக்காவிடில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் போராட்டம்


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி பிர­க­டனம் தொடர்­பாக நடை­பெ­ற­வுள்ள உயர்­மட்ட பேச்­சு­வார்த்­தையில் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சுமுக தீர்வு எட்­டப்­ப­டா­விட்டால் கொழும்பில் ஜனா­தி­பதி மாளி­கையின் முன்னால் வித்­தி­யா­ச­மான முறையில் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக சம்­பந்­தப்­பட்ட தரப்­புகள் தெரி­வித்­துள்­ளன. 

ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருடன் இன்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்ள பேச்­சு­வார்த்தை தோல்­வியில் முடிந்தால், ஜனா­தி­ப­தியின் மாளி­கையின் முன்னால் கொழும்பில் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் முசலி கிளைத்­த­லை­வரும் அல்­ஜாசிம் பெட­ரேஷன் தலை­வ­ரு­மான மௌலவி எம்.எம்.தௌபீக் ஆகியோர் தெரி­வித்­தனர். 

இன்றைய உயர்­மட்ட பேச்­சு­வார்த்­தையில் வர்த்­த­மானி பிர­க­ட­னத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சுமு­க­மான தீர்வு வழங்­கப்­ப­டா­விட்டால் முச­லி­யி­லி­ருந்து மக்கள் கொழும்பு நோக்கி வரு­வார்கள்.

கொழும்பில் நீதி­கோரி கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் ஈடு­ப­டு­வார்கள். தொடர்ந்தும் முச­லியில் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தைத் தொட­ராது ஜனா­தி­பதி மாளி­கையின் முன்னால் நடாத்­து­வ­தற்குத் தீர்­மா­னித்­தி­ருக்­கிறோம். போராட்­டத்­துக்கு முஸ்லிம் சமூகம் ஆத­ரவு வழங்க வேண்டும்” என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் முசலி கிளைத் தலைவர் மௌலவி எம்.எம்.தௌபீக் தெரி­வித்தார். 

தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத்­சாலி இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், “நாளை மறு­தினம் ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருடன் நடை­பெ­ற­வுள்ள பேச்­சு­வார்த்­தையில் சுமு­க­மு­டிவு எட்­டப்­ப­டா­விட்டால் முசலி மக்கள் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­துள்ள கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தை மீண்டும் ஜனா­தி­ப­தியின் மாளி­கைக்கு முன்னால் நடாத்­து­வார்கள். ஆனால் வர்த்­த­மானி பிர­க­டனம் தொடர்பில் சுமு­க­மான தீர்­வொன்­றினைப் பெற்றுத் தரு­வ­தாக ஜனா­தி­ப­தியின் செய­லாளர் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார் என்றார். 

இந்த உயர்­மட்ட ஜனா­தி­ப­தி­யின் செய­லா­ள­ரு­ட­னான பேச்­சு­வார்த்­தையில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா, கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத்­சாலி. ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் சிவில் சமூக பிர­தி­நி­திகள் உல­மா­ச­பையின் பிர­தி­நி­திகள் ஆகியோர் கலந்து கொள்­ள­வுள்­ளனர். 

அர­சியல் மற்றும் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளுடன் ஜனா­தி­பதி இறு­தி­யாக மேற்­கொண்ட கலந்­து­ரை­யா­ட­லின்­போது  தான் விடுத்த பணிப்­புரை அதி­கா­ரி­களால் தவ­றாகப் புரிந்து கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் மக்கள் வாழும் பகு­தி­களை வர்த்­த­மா­னியில் பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு தான் உத்­த­ர­வி­ட­வில்லை எனவும் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

Comments