தாக்குதல்கள் கட்டுப்பாட்டில் : அரசும் பொலிஸாரும் பொறுப்பு என்கிறார் அமைச்சர் சாகல
- பாராளுமன்ற செய்தியாளர்கள் -
அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு சொந்தமான உடைமைகள் தீயிடப்பட்ட சம்பவங்களுக்கு அரசாங்கமும் பொலிஸாரும் பொறுப்புக் கூறவேண்டும்.
பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்கள் தீயிடப்பட்ட சம்வங்களுக்கான விசாரணை நடைபெறுகின்றது. குற்றவாளிகளை இனங்காண ஓரிரு நாட்கள் அவகாசம் வேண்டும் என்று சட்டம் , ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க சபையில் தெரிவித்தார்.
மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 23 கீழ் 2 நிலையியற் கட்டளையின் கீழ் அநுர குமார திஸாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போது நாட்டில் மீளவும் இனவாதம் தோன்றியுள்ளது. இனவாத காரணமாக ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக நாம் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டோம். அதனை எம்மால் மறக்கமுடியாது. பிரித்தானியாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தின் ஊடாக எமக்கு இலங்கை கடந்த காலங்கள் முகங்கொடுத்த பிரச்சினை நினைவுக்கு வருகின்றது.
இந்நிலையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இந்தப் பிரச்சினை அரசாங்கத்தின் குறைபாடுகளால் நிகழ்ந்துள்ளமையை நாம் ஏற்கின்றோம். இந்த சம்பவங்களுக்கு அரசாங்கமும் பொலிஸாருமே பொறுப்புக் கூறவேண்டும்.
பொலிஸார் சட்டத்தை உரிய முறையில் நிலைநாட்ட வேண்டும். பொலிஸாருக்கு இனம்,மதம் என்பது இல்லை. சட்டத்தை சீர்குலைப்பவர்கள் எவராக இருப்பினும் இன, பேதம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாட்டு மக்கள் அச்சமில்லாமல் வாழ வேண்டும். அதற்கான சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். மீளவும் நாட்டில் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது.
பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்கள் தீயிடப்பட்ட சம்பவங்களுக்கான விசாரணைகள் தற்போது நடைபெறுகின்றன. குற்றவாளிகளை இனங்காண மூன்று நாள் கால அவகாசம் வேண்டும். அத்துடன் கஹவத்தை வர்த்தக நிலையத்தில் தீ மூண்டது ஒரு விபத்தாகும். கஹவத்தையில் விபத்தின் காரணமாக ஏற்பட்ட தீயானது பக்கத்திலிருந்த முஸ்லிம் ஒருவரின் கடைக்கும் பரவியுள்ளது.அத்துடன் எல்பிட்டிய சம்பவம் ஒரு திருட்டாகும்.
கொள்ளையிட சென்ற போது ஏற்பட்ட சம்பவமாக இது பதிவாகியுள்ளது.எனினும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடாக கணக்கில் போடப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார்.
அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு சொந்தமான உடைமைகள் தீயிடப்பட்ட சம்பவங்களுக்கு அரசாங்கமும் பொலிஸாரும் பொறுப்புக் கூறவேண்டும்.
பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்கள் தீயிடப்பட்ட சம்வங்களுக்கான விசாரணை நடைபெறுகின்றது. குற்றவாளிகளை இனங்காண ஓரிரு நாட்கள் அவகாசம் வேண்டும் என்று சட்டம் , ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க சபையில் தெரிவித்தார்.
மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 23 கீழ் 2 நிலையியற் கட்டளையின் கீழ் அநுர குமார திஸாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போது நாட்டில் மீளவும் இனவாதம் தோன்றியுள்ளது. இனவாத காரணமாக ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக நாம் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டோம். அதனை எம்மால் மறக்கமுடியாது. பிரித்தானியாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தின் ஊடாக எமக்கு இலங்கை கடந்த காலங்கள் முகங்கொடுத்த பிரச்சினை நினைவுக்கு வருகின்றது.
இந்நிலையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இந்தப் பிரச்சினை அரசாங்கத்தின் குறைபாடுகளால் நிகழ்ந்துள்ளமையை நாம் ஏற்கின்றோம். இந்த சம்பவங்களுக்கு அரசாங்கமும் பொலிஸாருமே பொறுப்புக் கூறவேண்டும்.
பொலிஸார் சட்டத்தை உரிய முறையில் நிலைநாட்ட வேண்டும். பொலிஸாருக்கு இனம்,மதம் என்பது இல்லை. சட்டத்தை சீர்குலைப்பவர்கள் எவராக இருப்பினும் இன, பேதம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாட்டு மக்கள் அச்சமில்லாமல் வாழ வேண்டும். அதற்கான சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். மீளவும் நாட்டில் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது.
பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்கள் தீயிடப்பட்ட சம்பவங்களுக்கான விசாரணைகள் தற்போது நடைபெறுகின்றன. குற்றவாளிகளை இனங்காண மூன்று நாள் கால அவகாசம் வேண்டும். அத்துடன் கஹவத்தை வர்த்தக நிலையத்தில் தீ மூண்டது ஒரு விபத்தாகும். கஹவத்தையில் விபத்தின் காரணமாக ஏற்பட்ட தீயானது பக்கத்திலிருந்த முஸ்லிம் ஒருவரின் கடைக்கும் பரவியுள்ளது.அத்துடன் எல்பிட்டிய சம்பவம் ஒரு திருட்டாகும்.
கொள்ளையிட சென்ற போது ஏற்பட்ட சம்பவமாக இது பதிவாகியுள்ளது.எனினும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடாக கணக்கில் போடப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார்.


Comments
Post a Comment