கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு : நடந்தது என்ன?
-விடிவெள்ளி
10 இலட்சம் ரூபா கப்பம் கொடுக்கப்பட்டு சிறுவன் மீட்கப்பட்டதன் பின்பு பொலிஸாரினால் அப் பணமும் மீட்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இரு பெண்களும், இளைஞன் அசாமும் கம்பளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுவனின் தந்தை ரிபாஸ் சம்பவம் தொடர்பில் “விடிவெள்ளிக்கு” இவ்வாறு விபரித்தார்.
எனது மகன் கடந்த 3 ஆம் திகதி பிற்பகல் கடத்தப்பட்டார். எனது மைத்துனரான மொஹமட் அசாமுடன் சேர்த்தே அவர் கடத்தப்பட்டு விட்டார் என்றே நாங்கள் நம்பினோம். இருவரும் கடத்தப்பட்டு விட்டதாகவே கம்பளை பொலிஸில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்தோம்.
கடத்தப்பட்ட கடந்த 3 ஆம் திகதியிலிருந்தே என்னிடம் கப்பம் கேட்டு தொலைபேசி அழைப்புகள் கிடைத்தன. குறுந்தகவல்களையும் அனுப்பி வைத்தார்கள். தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகள் சில மணித்தியாலயம் நிறுத்தி வைக்கப்பட்டன.
அடுத்த தினம் காலை ஒன்பது மணிக்கு தொடர்பு கொண்டார்கள். இருவரையும் விடுவிப்பதற்கு 30 இலட்சம் கப்பம் வேண்டுமென்று தொலைபேசியினூடாக தெரிவித்தார்கள். 30 இலட்சம் தர முடியாது 10 இலட்சம் தருகிறேன் என்று தெரிவித்தேன். பின்பு மீண்டும் தொலைபேசி மூலம் 30 இலட்சம் தர வேண்டும் என்றார்கள். 10 இலட்சமே தர முடியும் என்று மீண்டும் கூறினேன்.
பின்பு மகனுடன் சேர்ந்து காணாமற் போன எனது மைத்துனர் மொஹமட் அசாமை பேச வைத்தார்கள். அவர் “என்னை வைத்தே இந்த டீலை செய்கிறார்கள்” என்றார். பின்பு நாங்கள் லொக்குவாவையே அனுப்புவோம். சிறியவனை வைத்துக் கொள்வோம். கொழும்பில் 15 இலட்சம் ரூபா கொடுக்க வேண்டும் என்றார்கள். லொக்குவா என்று கூறியது என் மைத்துனர் மொஹமட் அசாமையாகும்.
கடந்த 4 ஆம் திகதி எனது கையடக்க தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. அது மொஹமட் அசாமினது அழைப்பு. இரவு 11 மணியிருக்கும். தான் கண்டிக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் மறுதினம் அதாவது 5 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு எங்களை மருதானைக்கு வரும் படியும் கூறினார்.
மருதானைக்கு அதிகாலை 4 மணிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தோம். மருதானையில் பைக் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு நானும் நீங்களும் மாத்திரம் போகலாமென்றும் கூறினார்.
மருதானையில் அவர் குறிப்பிட்ட இடத்திற்கு இருவரும் சென்றோம். ஆனால் அங்கு பைக் நிறுத்திவைக்கப்பட்டிருக்கவில்லை. பின்பு மெயின் ஸ்ட்ரீட்டுக்கு முச்சக்கர வண்டியில் போவோம். கடத்தற் காரர்கள் அங்கு இருப்பார்கள் என்றார். பின்பு சம்மான் கோட்டு பள்ளிவாசலுக்கு முன்னால் இரண்டு பேர் இருப்பார்கள். அவர்கள் அங்கு இல்லாவிட்டால் நாங்கள் கல்முனைக்குத்தான் செல்ல வேண்டும் என மொஹமட் அசாம் (சிறுவனுடன் காணாமற் போய் திரும்பி வந்த இளைஞன்) கூறினார்.
மொஹமட் அசாமுக்குத் தெரியாமல் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. இந்த குழு கொழும்பிலிருந்து சிவில் உடையில் எம்மை பின்தொடர்ந்து வந்திருந்தது.
குறிப்பிட்ட இருவரும் அங்கு இருக்கவில்லை. அன்று சம்மான்கோட்டு பள்ளிவாசலில் சுபஹு தொழுதோம். எம்முடன் வந்த பொலிஸ் குழு வாகனத்திலேயே இருந்தது. ” ரிபாஸ் நானா ஏதும் தாறுமாறாக நடந்தால் என் உயிருக்கு ஆபத்து. அதனால் கடத்தல்காரர்கள் சொல்வது போல் நடந்து கொள்ளுங்கள்” என்றார் மொஹமட் அசாம். எனக்கு எனது பிள்ளை வேண்டும். பணம் தருவதில் பிரச்சினை இல்லை என்றேன். புறக்கோட்டையில் பல இடங்களுக்கும் எம்மை அழைத்துச் சென்றார்.
பிள்ளையை கொண்டு வந்து விட்டதன் பின்பு 15 இலட்சம் கொடுக்க முடியும் என்றவர் 10 ஆயிரம் ரூபா பணத்தையும் பெற்றுக்கொண்டு எனது மனைவியின் தந்தையுடன் போக வேண்டும் 5 மணித்தியாலயங்கள் செல்லும் என்றார். பின்பு கல்முனை பஸ் நிறுத்துமிடத்திற்குச் சென்றார்.
எல்லா சம்பவங்களையும் அவதானித்துக் கொண்டிருந்த சிவில் உடையில் இருந்த கம்பளை பொலிஸ் அதிகாரிகள் மைத்துனர் மீது சந்தேகப்பட்டு அவரை மாளிகாவத்தையில் இருந்த வீடொன்றிற்கு அழைத்துச் சென்று இரவு 7.30 மணியிலிருந்து 10.30 மணிவரை மொஹமட் அசாமை விசாரணை செய்தார்கள். அவர் உண்மையான விபரங்களைத் தெரிவிக்கவில்லை. கல்முனைக்கு போக வேண்டும் என்றே கூறினார். பொலிஸார் கொழும்பில் அவர்களது காரியாலயமொன்றுக்கும் அழைத்துச் சென்று அசாமை விசாரித்தார்கள்.
பின்பு கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. அசாமிடம் 15 இலட்சம் ரூபாவும் கையடக்க தொலைபேசியையும் கொடுக்கும் படி தெரிவிக்கப்பட்டது.
4 ஆம் குறுக்குத் தெரு, பீபல்ஸ் பார்க் என்று பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். கடத்தல் காரர்கள் தாம் கூறுவது போன்று நடந்து கொள்ளாவிட்டால் பிள்ளையை பெக் பண்ணி அனுப்புவதாக தொலைபேசியில் அச்சுறுத்தினார்கள். நாங்கள் இரவு 8 மணிவரை மாளிகாவத்தை மையவாடியில் தங்கியிருந்தோம்.
யாரும் எங்களைப் பின் தொடரக் கூடாது. நாங்கள் கல்முனை போவோம் என்றார். நாங்கள் ஒரு வாகனத்திலும் பொலிஸ் குழு மற்றொரு வாகனத்திலும் கல்முனைக்குச் சென்றோம். பின்னர் கல்முனையிலிருந்து செங்கலடிக்குச் சென்றோம்.
செங்கலடி சந்தியில் இறங்கி அசாம் உறுகாமத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். சந்தியிலிருந்து 1 ½ கிலோமீட்டர் சென்றோம். போகும் போது 10 இலட்சம் ரூபா முதலிலும் பிறகு 5 இலட்சம் ரூபாவும் கொடுப்போம் என்றார். அங்கு சென்றதும் வாகனத்திலிருந்து இறங்கிச் சென்றார். என்னை இறங்க வேண்டாம் என்றார்.
நான் கொடுத்த 10 இலட்சம் ரூபாவை ஒரு வீட்டுக்குள் சென்று கொடுத்தார். அதன் பின் எனது பிள்ளையைக் கூட்டி வந்தார். எந்த வீட்டிலிருந்து கூட்டி வந்தார் என்பதை நான் காணவில்லை.
பொலிஸார் அந்த சுற்றுப் புறத்திலேயே இருந்தார்கள். பின்பு நான் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு செங்கலடிக்கு வந்து சேர்ந்தேன்.
பொலிஸார் அசாமைக் கூட்டிக்கொண்டு கரடியனாறுக்குச் சென்றார்கள். பிள்ளையை நான் எனது குடும்பத்தாரிடம் கொடுத்து விட்டு பொலிஸாருடன் கரடியனாறுக்கு சென்றேன்.
பிள்ளையை வைத்திருந்த வீட்டில் ஒரு வயோதிபப் பெண்ணும் இன்னொரு பெண்ணும் 8 வயது மதிக்கத்தக்க பெண் பிள்ளையும் இருந்தார்கள். நான் கொடுத்த 10 இலட்சம் ரூபா ஆட்டு மடுவத்திலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது. அது சிறிய வீடு. எனது பிள்ளையை ஆட்டு மடுவத்திலே வைத்திருந்தார்கள். அந்த வீடு காத்தான் குடியை சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.
அசாமின் சகோதரர் ஒருவரும் இச்சம்பவத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறார். அவரது பாஸ்போர்ட் அந்த வீட்டிலிருந்தே கிடைத்தது.
இது போன்ற அநியாயம் வேறு எந்த குடும்பத்துக்கும் இழைக்கப்படக் கூடாது. நான்கு நாட்கள் எனது உயிரான மகனை வைத்துக்கொண்டு நாடகமாடியிருக்கிறார்கள். அதுவும் எனது உம்மாவின் நானாவின் மகனான அசாம் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்.
எனது பிள்ளைக்காக முஸ்லிம் பள்ளிவாசல்கள் மாத்திரமல்ல, பன்சலைகள், கோயில்கள் என்பனவற்றிலும் பிரார்த்தனைகள் இடம் பெற்றன. அனைவருக்கும், கம்பளை பொலிஸாருக்கும் சம்மந்தப்பட்ட ஏனைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன் என்றார்.
.
10 இலட்சம் ரூபா கப்பம் கொடுக்கப்பட்டு சிறுவன் மீட்கப்பட்டதன் பின்பு பொலிஸாரினால் அப் பணமும் மீட்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இரு பெண்களும், இளைஞன் அசாமும் கம்பளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுவனின் தந்தை ரிபாஸ் சம்பவம் தொடர்பில் “விடிவெள்ளிக்கு” இவ்வாறு விபரித்தார்.
எனது மகன் கடந்த 3 ஆம் திகதி பிற்பகல் கடத்தப்பட்டார். எனது மைத்துனரான மொஹமட் அசாமுடன் சேர்த்தே அவர் கடத்தப்பட்டு விட்டார் என்றே நாங்கள் நம்பினோம். இருவரும் கடத்தப்பட்டு விட்டதாகவே கம்பளை பொலிஸில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்தோம்.
கடத்தப்பட்ட கடந்த 3 ஆம் திகதியிலிருந்தே என்னிடம் கப்பம் கேட்டு தொலைபேசி அழைப்புகள் கிடைத்தன. குறுந்தகவல்களையும் அனுப்பி வைத்தார்கள். தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகள் சில மணித்தியாலயம் நிறுத்தி வைக்கப்பட்டன.
அடுத்த தினம் காலை ஒன்பது மணிக்கு தொடர்பு கொண்டார்கள். இருவரையும் விடுவிப்பதற்கு 30 இலட்சம் கப்பம் வேண்டுமென்று தொலைபேசியினூடாக தெரிவித்தார்கள். 30 இலட்சம் தர முடியாது 10 இலட்சம் தருகிறேன் என்று தெரிவித்தேன். பின்பு மீண்டும் தொலைபேசி மூலம் 30 இலட்சம் தர வேண்டும் என்றார்கள். 10 இலட்சமே தர முடியும் என்று மீண்டும் கூறினேன்.
பின்பு மகனுடன் சேர்ந்து காணாமற் போன எனது மைத்துனர் மொஹமட் அசாமை பேச வைத்தார்கள். அவர் “என்னை வைத்தே இந்த டீலை செய்கிறார்கள்” என்றார். பின்பு நாங்கள் லொக்குவாவையே அனுப்புவோம். சிறியவனை வைத்துக் கொள்வோம். கொழும்பில் 15 இலட்சம் ரூபா கொடுக்க வேண்டும் என்றார்கள். லொக்குவா என்று கூறியது என் மைத்துனர் மொஹமட் அசாமையாகும்.
கடந்த 4 ஆம் திகதி எனது கையடக்க தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. அது மொஹமட் அசாமினது அழைப்பு. இரவு 11 மணியிருக்கும். தான் கண்டிக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் மறுதினம் அதாவது 5 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு எங்களை மருதானைக்கு வரும் படியும் கூறினார்.
மருதானைக்கு அதிகாலை 4 மணிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தோம். மருதானையில் பைக் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு நானும் நீங்களும் மாத்திரம் போகலாமென்றும் கூறினார்.
மருதானையில் அவர் குறிப்பிட்ட இடத்திற்கு இருவரும் சென்றோம். ஆனால் அங்கு பைக் நிறுத்திவைக்கப்பட்டிருக்கவில்லை. பின்பு மெயின் ஸ்ட்ரீட்டுக்கு முச்சக்கர வண்டியில் போவோம். கடத்தற் காரர்கள் அங்கு இருப்பார்கள் என்றார். பின்பு சம்மான் கோட்டு பள்ளிவாசலுக்கு முன்னால் இரண்டு பேர் இருப்பார்கள். அவர்கள் அங்கு இல்லாவிட்டால் நாங்கள் கல்முனைக்குத்தான் செல்ல வேண்டும் என மொஹமட் அசாம் (சிறுவனுடன் காணாமற் போய் திரும்பி வந்த இளைஞன்) கூறினார்.
மொஹமட் அசாமுக்குத் தெரியாமல் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. இந்த குழு கொழும்பிலிருந்து சிவில் உடையில் எம்மை பின்தொடர்ந்து வந்திருந்தது.
குறிப்பிட்ட இருவரும் அங்கு இருக்கவில்லை. அன்று சம்மான்கோட்டு பள்ளிவாசலில் சுபஹு தொழுதோம். எம்முடன் வந்த பொலிஸ் குழு வாகனத்திலேயே இருந்தது. ” ரிபாஸ் நானா ஏதும் தாறுமாறாக நடந்தால் என் உயிருக்கு ஆபத்து. அதனால் கடத்தல்காரர்கள் சொல்வது போல் நடந்து கொள்ளுங்கள்” என்றார் மொஹமட் அசாம். எனக்கு எனது பிள்ளை வேண்டும். பணம் தருவதில் பிரச்சினை இல்லை என்றேன். புறக்கோட்டையில் பல இடங்களுக்கும் எம்மை அழைத்துச் சென்றார்.
பிள்ளையை கொண்டு வந்து விட்டதன் பின்பு 15 இலட்சம் கொடுக்க முடியும் என்றவர் 10 ஆயிரம் ரூபா பணத்தையும் பெற்றுக்கொண்டு எனது மனைவியின் தந்தையுடன் போக வேண்டும் 5 மணித்தியாலயங்கள் செல்லும் என்றார். பின்பு கல்முனை பஸ் நிறுத்துமிடத்திற்குச் சென்றார்.
எல்லா சம்பவங்களையும் அவதானித்துக் கொண்டிருந்த சிவில் உடையில் இருந்த கம்பளை பொலிஸ் அதிகாரிகள் மைத்துனர் மீது சந்தேகப்பட்டு அவரை மாளிகாவத்தையில் இருந்த வீடொன்றிற்கு அழைத்துச் சென்று இரவு 7.30 மணியிலிருந்து 10.30 மணிவரை மொஹமட் அசாமை விசாரணை செய்தார்கள். அவர் உண்மையான விபரங்களைத் தெரிவிக்கவில்லை. கல்முனைக்கு போக வேண்டும் என்றே கூறினார். பொலிஸார் கொழும்பில் அவர்களது காரியாலயமொன்றுக்கும் அழைத்துச் சென்று அசாமை விசாரித்தார்கள்.
பின்பு கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. அசாமிடம் 15 இலட்சம் ரூபாவும் கையடக்க தொலைபேசியையும் கொடுக்கும் படி தெரிவிக்கப்பட்டது.
4 ஆம் குறுக்குத் தெரு, பீபல்ஸ் பார்க் என்று பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். கடத்தல் காரர்கள் தாம் கூறுவது போன்று நடந்து கொள்ளாவிட்டால் பிள்ளையை பெக் பண்ணி அனுப்புவதாக தொலைபேசியில் அச்சுறுத்தினார்கள். நாங்கள் இரவு 8 மணிவரை மாளிகாவத்தை மையவாடியில் தங்கியிருந்தோம்.
யாரும் எங்களைப் பின் தொடரக் கூடாது. நாங்கள் கல்முனை போவோம் என்றார். நாங்கள் ஒரு வாகனத்திலும் பொலிஸ் குழு மற்றொரு வாகனத்திலும் கல்முனைக்குச் சென்றோம். பின்னர் கல்முனையிலிருந்து செங்கலடிக்குச் சென்றோம்.
செங்கலடி சந்தியில் இறங்கி அசாம் உறுகாமத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். சந்தியிலிருந்து 1 ½ கிலோமீட்டர் சென்றோம். போகும் போது 10 இலட்சம் ரூபா முதலிலும் பிறகு 5 இலட்சம் ரூபாவும் கொடுப்போம் என்றார். அங்கு சென்றதும் வாகனத்திலிருந்து இறங்கிச் சென்றார். என்னை இறங்க வேண்டாம் என்றார்.
நான் கொடுத்த 10 இலட்சம் ரூபாவை ஒரு வீட்டுக்குள் சென்று கொடுத்தார். அதன் பின் எனது பிள்ளையைக் கூட்டி வந்தார். எந்த வீட்டிலிருந்து கூட்டி வந்தார் என்பதை நான் காணவில்லை.
பொலிஸார் அந்த சுற்றுப் புறத்திலேயே இருந்தார்கள். பின்பு நான் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு செங்கலடிக்கு வந்து சேர்ந்தேன்.
பொலிஸார் அசாமைக் கூட்டிக்கொண்டு கரடியனாறுக்குச் சென்றார்கள். பிள்ளையை நான் எனது குடும்பத்தாரிடம் கொடுத்து விட்டு பொலிஸாருடன் கரடியனாறுக்கு சென்றேன்.
பிள்ளையை வைத்திருந்த வீட்டில் ஒரு வயோதிபப் பெண்ணும் இன்னொரு பெண்ணும் 8 வயது மதிக்கத்தக்க பெண் பிள்ளையும் இருந்தார்கள். நான் கொடுத்த 10 இலட்சம் ரூபா ஆட்டு மடுவத்திலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது. அது சிறிய வீடு. எனது பிள்ளையை ஆட்டு மடுவத்திலே வைத்திருந்தார்கள். அந்த வீடு காத்தான் குடியை சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.
அசாமின் சகோதரர் ஒருவரும் இச்சம்பவத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறார். அவரது பாஸ்போர்ட் அந்த வீட்டிலிருந்தே கிடைத்தது.
இது போன்ற அநியாயம் வேறு எந்த குடும்பத்துக்கும் இழைக்கப்படக் கூடாது. நான்கு நாட்கள் எனது உயிரான மகனை வைத்துக்கொண்டு நாடகமாடியிருக்கிறார்கள். அதுவும் எனது உம்மாவின் நானாவின் மகனான அசாம் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்.
எனது பிள்ளைக்காக முஸ்லிம் பள்ளிவாசல்கள் மாத்திரமல்ல, பன்சலைகள், கோயில்கள் என்பனவற்றிலும் பிரார்த்தனைகள் இடம் பெற்றன. அனைவருக்கும், கம்பளை பொலிஸாருக்கும் சம்மந்தப்பட்ட ஏனைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன் என்றார்.
.


Comments
Post a Comment