முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் மீது தீவைப்பு


* மிரிஹான, அம்பாறைப் பகுதிகளில் சம்பவம்
* 5 நாட்களுக்குள் நான்கு கடைகள் எரிப்பு
முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான இரண்டு வர்த்­தக நிலை­யங்கள் நேற்று அதி­காலை தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ளன. மிரி­ஹானை மற்றும் அம்­பாறை பகு­தி­க­ளி­லேயே இவ்­வாறு கடைகள் தீ வைக்­கப்­பட்டு அழிக்­கப்­பட்­டுள்­ளன. கடந்த வியா­ழக்­கி­ழமை முதல் நேற்­று­வரை ஐந்து நாட்­க­ளுக்குள் நான்கு கடைகள் எரி­யூட்­டப்­பட்­டுள்ள நிலையில் எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. 

மிரி­ஹான சம்­பவம்
மிரி­ஹான பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட நாவின்ன சந்­தியில் விேஜ­ராம பாதையில்  இயங்­கி­வந்த  முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­ய­மொன்று  நேற்று அதி­காலை இனந்­தெ­ரி­யா­தோரால் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ளது. 

நாவின்ன ரெக்சின் சென்டர் எனும்  இந்த வர்த்­தக  நிலையம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டதால் சுமார்  2 கோடி ரூபா பெறு­ம­தி­யான பொருட்கள் எரிந்து நாச­மா­கி­யுள்­ள­தாக மிரி­ஹான பொலிஸில்  முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

வர்த்­தக  நிலை­யத்தில் சி.சி.ரி.வி. கமெரா பொருத்­தப்­பட்­டி­ருக்­கா­ததால் பொலிஸார் வர்த்­தக நிலை­யத்­துக்கு அரு­கி­லுள்ள  வைன் ஸ்டோர்ஸின் சி.சி.ரி.வி.கமெரா பதி­வு­களை  விசா­ர­ணை­க­ளுக்­காக பெற்­றுக்­கொண்­டுள்­ளனர். 

வர்த்­தக நிலை­யத்தின்  உரி­மை­யாளர் இம்­தியாஸ் சம்­பவம் தொடர்பில்  விப­ரிக்­கையில், அதி­காலை 4 ம­ணிக்கு எனது உற­வினர் ஒருவர் தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு கடை எரிந்­துள்ள விப­ரத்தைத் தெரி­வித்தார். நான் உட­ன­டி­யாகச் சென்றேன். அங்கே  பொலி­ஸாரும் வந்­தி­ருந்­தார்கள். மிரி­ஹான  பொலிஸார்  விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­துடன் கைரேகை அடை­யா­ளங்­க­ளையும் பதிவு செய்­தனர். 

நான் கடந்த 14 வரு­டங்­க­ளாக  இந்த வியா­பார நிலை­யத்தை நடாத்தி வரு­கிறேன். இரவில்  கடையை மூடி­விட்டு மின்­சார  மெயின் சுவிட்­சையும் ஓப் பண்ணி விட்டே செல்­வது  வழக்கம். அன்றும் அவ்­வாறே மெயின் . சுவீட்சை   ஓப் செய்து விட்டே  சென்றேன். 
கடையின்  பின் வாச­லி­னாலே தீ மூட்­டப்­பட்­டுள்­ளது. 

இது இன­வா­தி­களின்  நாச­கார  செயலே அன்றி வேறொன்­று­மல்ல. மிரி­ஹான பொலி­ஸிலும்   இவ்­வாறே வாக்குமூலம்  கொடுத்­துள்ளேன்.   மின் ஒழுக்கு  ஏற்­பட்டு  கடை எரிந்­துள்­ளது என்று கூறவே முடி­யாது. எனக்கு சுமார் 2 கோடி ரூபா நஷ்­டத்தை மேற்­பட்­டுள்­ளது என்றார். 

மிரி­ஹான பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

அம்­பாறை சம்­பவம்
 அம்­பாறை மாவட்ட செய­லத்­திற்கு அரு­கா­மையில் நடத்­தப்­பட்டு வந்த முஸ்லிம் ஒரு­வரின் உண­வகம் தீயினால் சேத­ம­டைந்­துள்­ளது. இச் சம்­பவம் நேற்று  திங்­கட்­கி­ழமை அதி­காலை வேளையில் இடம்­பெற்­றுள்­ளது.

மேற்­படி சம்­பவம் திட்­ட­மிட்ட செய­லாக இருக்­கலாம் என சந்­தேகம் தெரி­விக்­கப்­ப­டு­வ­துடன் இவ்­வ­னர்த்­தினால் உண­வ­கத்தின் மேற்­கூரை மற்றும் முன்­க­தவு, மின்­வி­சிறி உட்­பட சில உப­க­ர­ணங்­களும் சேத­ம­டைந்­துள்­ள­தாக கடை உரி­மை­யாளர் அம்­பாறை பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு தெரி­வித்­துள்ளார்.

இவ்­வு­ண­கத்தை இறக்­கா­மத்தைச் சேர்ந்த அஸ்வர் என்­பவர் நடத்தி வந்­துள்ளார். இங்கு பெரும்­பான்மை இனத்­த­வர்களுக்கே வியா­பா­ரம் அதிகம் இடம்­பெற்­று­வந்­துள்­ள­துடன், அர­சாங்க ஊழி­யர்கள் மற்றும் பயணிகளுக்கும் அதிகம் உணவுகள் வழங்குமிடமாகவும் இருந்து வந்துள்ளது.

இத் தீ அனர்த்தத்தின் காரணமாக இப்பிரதேச பெரும்பான்மை சமூகத்தினர் மற்றும் உணவுகளை பெற்று வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

 இது தொடர்பான விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments