பிரிவினைவாதத்தை தோற்றுவித்தோர் இன மத வாதத்தை தூண்டுகின்றனர்
எம்.ஆர்.எம்.வஸீம் -
சட்டத்தை மீறுவோருக்கு நடவடிக்கை என்கிறார் பிரதமர்
பிரிவினை வாதத்தை தோற்றுவித்தவர்கள் தற்போது இனவாத்தையும் மதவாதத்தையும் கையில் எடுத்துள்ளனர். எக்காரணம் கொண்டும் இனவாதத்துக்கு இடமளிக்கமுடியாது. அத்துடன் சட்டத்தை மீறுபவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொலிஸார் அவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும் நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வெற்றிகரமான செயற்திட்டத்தை முடித்த இளைஞர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
இளைஞர்களை கட்டுப்படுத்தி அவர்களை முன்னுக்கு கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்துக்கு வந்ததுடன் ஆரம்பிக்க நடவடிக்ககை எடுத்தோம்.
அதனடிப்படையிலே மீண்டும் இளைஞர் அமைப்பை ஆரம்பித்தோம். அரசியல் இல்லாத இளைஞர் அமைப்புகளை கிராமங்களில் ஏற்படுத்தினோம். ஏனெனில் அரசியல் செய்வதற்கு அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அத்துடன் இளைஞர் அமைப்புகளை மேலும் முன்னேற்றுவதற்கு இளைஞர் பாராளுமன்றத்தை ஏற்படுத்தினோம்.
அத்துடன் இளைஞர் அமைப்பு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு இளைஞர் அமைப்பின் தலைவருக்கு தெரிவித்துள்ளேன், அத்துடன் கிராமங்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளோம். அதேபோன்று இளைஞர்களின் தொழில் மற்றும் வருமானத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.இந்த வேலைத்திட்டங்களை நல்லமுறையில் முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்வதற்கு ஆரம்பமாக நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சமாதானம் இருக்கவேண்டும்.
மேலும் இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த இளைஞர்கள் போட்டிகளில் முதலிடங்கள் பலவற்றை பெற்றதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பெருமைப்படுகின்றேன். இற்றைக்கு 15வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்வு நடைபெற்றிருந்தால் யாழ்ப்பாணத்துக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.
1985 ஆம் ஆண்டுக்கு பிறகு வடக்கில் இருந்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் செயலிழக்கப்பட்டன. யுத்தம் காரணமாக வடக்கின் இளைஞர்கள் நாட்டை விட்டு சென்றனர். ஆனால் இன்று அங்கு யுத்தம் இல்லை. இளைஞர்களுக்கு நம்பிகை ஊட்டும்வகையில் தெற்கைப்போன்று அங்கும் அபிவிருத்தி ஏற்படவேண்டும். ஒற்றுமையும் இருக்கவேண்டும்.
மேலும் அரசியல் கட்சிகள் என்றவகையில் நாங்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றத்தின்பால் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்பட இடமளிக்க முடியாது. நாட்டில் நல்லிணக்கம் இல்லாவிட்டால் அபிவிருத்தியும் இல்லாமலாகிவிடும். 83ஆம் ஆண்டு எமக்கு பின்னால் இருந்த இந்தோனேசியா,தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் இன்று எம்மை முந்திச்சென்றுள்ளன. பங்களாதேஷ் எமக்கு அருகில் இருக்கின்றது. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் ஏற்படாமல் இருந்தால் நாங்கள் இந்த நாடுகளுக்கெல்லாம் முன்னிலையில் இருந்திருப்போம்.
அத்துடன் இந்த நிகழ்வுக்கு யாழ்ப்பாணத்தில் இரந்து இளைஞர்கள் வந்திருப்பது சுபவாதமாகும். இதன் மூலம் ஏற்படக்கூடிய நல்லிணக்கத்தை பாதுகாத்துக்கொண்டு அடுத்துவரக்கூடிய 10 – 15 வருடங்களில் நாட்டை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்கு ஏதேனும் தடைகள் வருமாக இருந்தால் அதனை நாங்கள் நிறுத்தவேண்டும். குறிப்பாக நாட்டை முன்னேற்றுவதற்கு நாங்கள் கவனம் செலுத்துவதாக இருந்தால் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொண்டு விரைவாக முன்னேற்ற வேண்டும்.
அதற்காக சர்வதேச நாடுகளில் இருந்து எங்களுக்கு பாரியளவில் ஒத்துழைப்பு கிடைத்து வருகின்றது. இந்த மாதம் முதல் ஜீ.எஸ். பி. மீண்டும் கிடைத்துள்ளது.இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் எமக்கு உதவ முன்வந்துள்ளன. இதற்கு அடிப்படைக்காரணம் அரசியல் , நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகமாகும். இந்த நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை யாராவது சிதைக்க முற்பட்டால் அதற்கு இடமளிக்க முடியாது. இல்லாமலாக்கப்பட்ட பிரிவினை வாதத்தை மீண்டும் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
அத்துடன் யாராலும் இனவாதம் மதவாதத்தை ஏற்படுத்த முடியாது. அதற்கு இடமளிக்கவும் முடியாது.அந்த செய்பாடுகளை நாங்கள் அனைவரும் கண்டிக்கவேண்டும். நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது.
மதம் என்பது அனைவரையும் ஒன்றிணைப்பதாகும். பிரிப்பதல்ல. யாராவது இன,மதவாதத்தை ஏற்படுத்த முயற்சித்தால் அதனை தடுப்பது அனைவரதும் கடமையாகும்.மதத்தைக்கொண்டு வைராக்கியத்தை ஏற்படுத்த எந்த மதத்திலும் தெரிவிக்கவில்லை. நாங்கள் எவ்வாறு கதைக்கவேண்டும் என்று புத்தபெருமான் எங்களுக்கு போதித்துள்ளார்.எங்களது உள்ளத்தை திருத்திக்கொண்டால்தான் நாங்கள் பெளத்தர்களாகலாம்.அவ்வாறு கதைக்கவில்லை என்றால், உள்ளத்தை கட்டுப்படுத்திக்கொள்ளாவிட்டால் அதன் பெறுமதி என்ன என்று கேட்கின்றேன்.
அதனால் இன,மதவாதங்களை ஏற்படுத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு எதிராக செயற்படுமாறு மக்களை தெளிவுபடுத்துவது எமது கடமையாகும்.
அதற்காக அனைத்து இளைஞர்களும் தங்கள் கிராமங்களில் இன,மதவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று யாராவது சட்டத்தை மீறுவதாக இருந்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸார் உடனடியாக செயற்பட்டு சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எந்த இனத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளோம்.
அதேபோன்று இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து இழுத்தடித்துக்கொண்டிருக்காமல் பொலிஸார் உடனடியாக இதற்கு எதிராக செயற்படவேண்டும். நீதிமன்றங்கள் நீதியை நிலைநாட்டவும் பொலிஸார் சட்டத்தை பாதுகாக்கவும் நாங்கள் இடமளிக்கவேண்டும் என்றார்.
சட்டத்தை மீறுவோருக்கு நடவடிக்கை என்கிறார் பிரதமர்
பிரிவினை வாதத்தை தோற்றுவித்தவர்கள் தற்போது இனவாத்தையும் மதவாதத்தையும் கையில் எடுத்துள்ளனர். எக்காரணம் கொண்டும் இனவாதத்துக்கு இடமளிக்கமுடியாது. அத்துடன் சட்டத்தை மீறுபவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொலிஸார் அவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும் நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வெற்றிகரமான செயற்திட்டத்தை முடித்த இளைஞர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
இளைஞர்களை கட்டுப்படுத்தி அவர்களை முன்னுக்கு கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்துக்கு வந்ததுடன் ஆரம்பிக்க நடவடிக்ககை எடுத்தோம்.
அதனடிப்படையிலே மீண்டும் இளைஞர் அமைப்பை ஆரம்பித்தோம். அரசியல் இல்லாத இளைஞர் அமைப்புகளை கிராமங்களில் ஏற்படுத்தினோம். ஏனெனில் அரசியல் செய்வதற்கு அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அத்துடன் இளைஞர் அமைப்புகளை மேலும் முன்னேற்றுவதற்கு இளைஞர் பாராளுமன்றத்தை ஏற்படுத்தினோம்.
அத்துடன் இளைஞர் அமைப்பு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு இளைஞர் அமைப்பின் தலைவருக்கு தெரிவித்துள்ளேன், அத்துடன் கிராமங்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளோம். அதேபோன்று இளைஞர்களின் தொழில் மற்றும் வருமானத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.இந்த வேலைத்திட்டங்களை நல்லமுறையில் முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்வதற்கு ஆரம்பமாக நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சமாதானம் இருக்கவேண்டும்.
மேலும் இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த இளைஞர்கள் போட்டிகளில் முதலிடங்கள் பலவற்றை பெற்றதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பெருமைப்படுகின்றேன். இற்றைக்கு 15வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்வு நடைபெற்றிருந்தால் யாழ்ப்பாணத்துக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.
1985 ஆம் ஆண்டுக்கு பிறகு வடக்கில் இருந்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் செயலிழக்கப்பட்டன. யுத்தம் காரணமாக வடக்கின் இளைஞர்கள் நாட்டை விட்டு சென்றனர். ஆனால் இன்று அங்கு யுத்தம் இல்லை. இளைஞர்களுக்கு நம்பிகை ஊட்டும்வகையில் தெற்கைப்போன்று அங்கும் அபிவிருத்தி ஏற்படவேண்டும். ஒற்றுமையும் இருக்கவேண்டும்.
மேலும் அரசியல் கட்சிகள் என்றவகையில் நாங்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றத்தின்பால் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்பட இடமளிக்க முடியாது. நாட்டில் நல்லிணக்கம் இல்லாவிட்டால் அபிவிருத்தியும் இல்லாமலாகிவிடும். 83ஆம் ஆண்டு எமக்கு பின்னால் இருந்த இந்தோனேசியா,தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் இன்று எம்மை முந்திச்சென்றுள்ளன. பங்களாதேஷ் எமக்கு அருகில் இருக்கின்றது. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் ஏற்படாமல் இருந்தால் நாங்கள் இந்த நாடுகளுக்கெல்லாம் முன்னிலையில் இருந்திருப்போம்.
அத்துடன் இந்த நிகழ்வுக்கு யாழ்ப்பாணத்தில் இரந்து இளைஞர்கள் வந்திருப்பது சுபவாதமாகும். இதன் மூலம் ஏற்படக்கூடிய நல்லிணக்கத்தை பாதுகாத்துக்கொண்டு அடுத்துவரக்கூடிய 10 – 15 வருடங்களில் நாட்டை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்கு ஏதேனும் தடைகள் வருமாக இருந்தால் அதனை நாங்கள் நிறுத்தவேண்டும். குறிப்பாக நாட்டை முன்னேற்றுவதற்கு நாங்கள் கவனம் செலுத்துவதாக இருந்தால் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொண்டு விரைவாக முன்னேற்ற வேண்டும்.
அதற்காக சர்வதேச நாடுகளில் இருந்து எங்களுக்கு பாரியளவில் ஒத்துழைப்பு கிடைத்து வருகின்றது. இந்த மாதம் முதல் ஜீ.எஸ். பி. மீண்டும் கிடைத்துள்ளது.இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் எமக்கு உதவ முன்வந்துள்ளன. இதற்கு அடிப்படைக்காரணம் அரசியல் , நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகமாகும். இந்த நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை யாராவது சிதைக்க முற்பட்டால் அதற்கு இடமளிக்க முடியாது. இல்லாமலாக்கப்பட்ட பிரிவினை வாதத்தை மீண்டும் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
அத்துடன் யாராலும் இனவாதம் மதவாதத்தை ஏற்படுத்த முடியாது. அதற்கு இடமளிக்கவும் முடியாது.அந்த செய்பாடுகளை நாங்கள் அனைவரும் கண்டிக்கவேண்டும். நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது.
மதம் என்பது அனைவரையும் ஒன்றிணைப்பதாகும். பிரிப்பதல்ல. யாராவது இன,மதவாதத்தை ஏற்படுத்த முயற்சித்தால் அதனை தடுப்பது அனைவரதும் கடமையாகும்.மதத்தைக்கொண்டு வைராக்கியத்தை ஏற்படுத்த எந்த மதத்திலும் தெரிவிக்கவில்லை. நாங்கள் எவ்வாறு கதைக்கவேண்டும் என்று புத்தபெருமான் எங்களுக்கு போதித்துள்ளார்.எங்களது உள்ளத்தை திருத்திக்கொண்டால்தான் நாங்கள் பெளத்தர்களாகலாம்.அவ்வாறு கதைக்கவில்லை என்றால், உள்ளத்தை கட்டுப்படுத்திக்கொள்ளாவிட்டால் அதன் பெறுமதி என்ன என்று கேட்கின்றேன்.
அதனால் இன,மதவாதங்களை ஏற்படுத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு எதிராக செயற்படுமாறு மக்களை தெளிவுபடுத்துவது எமது கடமையாகும்.
அதற்காக அனைத்து இளைஞர்களும் தங்கள் கிராமங்களில் இன,மதவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று யாராவது சட்டத்தை மீறுவதாக இருந்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸார் உடனடியாக செயற்பட்டு சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எந்த இனத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளோம்.
அதேபோன்று இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து இழுத்தடித்துக்கொண்டிருக்காமல் பொலிஸார் உடனடியாக இதற்கு எதிராக செயற்படவேண்டும். நீதிமன்றங்கள் நீதியை நிலைநாட்டவும் பொலிஸார் சட்டத்தை பாதுகாக்கவும் நாங்கள் இடமளிக்கவேண்டும் என்றார்.


Comments
Post a Comment