” குடிபெயரும் கனவுகள் எனும் கவிதை நுால் வெளியீடு

-அஷ்ரப் ஏ சமத்

மன்னாரைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது கல்லொலுவை மினுவான்கொடையில் வசித்து வரும் ஆசிரியை றுவைதா மதீனின் ” குடிபெயரும் கனவுகள் எனும் கவிதை நுால் வெளியீடு அல்.அமான் முஸ்லீம் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாகக் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் கலந்து கொண்டு நுாலின் பிரதியை நுாலசிரியையிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.

இவ் வைபவத்தில் கலைவாதி கலீல், கின்னியா அமீா் அலி, உப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் எம் அமீன், அ.இ.மு. காங்கிரஸ் செயலாளா் சுபைதீன் ஹாஜியாா், கலைச்செல்வன், பாடசாலையின் அதிபா், லேக்கவுஸ் தமிழ் பிரசுரங்களின் ஆலோசகா் எம்.ஏ.எம்.நிலாம், எழுத்தாளா் மு. பசீர், டொக்டா் நஸ்மியா முனாசிக் டொக்டா் முஹம்மது முனாசீக் ஆகியோறும் உரையாற்றினாா்கள்.

அத்துடன் இப்பிரதேசத்தின் ஆசிரியா்கள் பாடசாலை பெற்றோா்கள் கலந்து கொண்டு நுால் பிரதிகளையும் நுாலசிரியா் றுவைதாவிடமிருந்து பெற்றுக் கொண்டனா்.




Comments