இனவாத செயற்பாடுகளை முறியடிக்க கோரும் சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று


கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் நாட்டில் சமூ­கங்க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பாக இன்று பாரா­ளு­மன்­றத்தில் சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணை­யொன்­றினை முன்­வைக்கவுள்ளார்.

இது தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் பாரா­ளு­மன்­றத்தின் பொது செய­லா­ள­ருக்கு முன்­ன­றி­வித்தல் கொடுத்­துள்ளார்.

அர­சாங்கம் தற்­போது முன்­னெ­டுத்து வரும் தேசிய நல்­லி­ணக்­கத்தை மேலும் சிறப்­பாக மேற்­கொள்­வ­தற்கும், நல்­லி­ணக்­கத்­துக்குத் தடை­களை ஏற்­ப­டுத்தும் அடிப்­படை வாத, இன­வாத சக்­தி­களின் செயற்­பா­டு­களை முறி­ய­டிப்­ப­தற்கும் உரிய நட­வ­டிக்­கை­களை பாரா­ளு­மன்றம் எடுக்க வேண்டுமென ஆலோ­சனை வழங்­கு­கின்றேன் என அவர் பாரா­ளு­மன்ற செய­லா­ள­ருக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில்  தெரி­வித்­துள்ளார். 

கடி­தத்தில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது ‘தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஆட்­சியில் அமர்த்­து­வ­தற்கு இந்­நாட்டில் வதியும் அனைத்து மக்­களும் பங்­க­ளிப்புச் செய்­தார்கள் என்­பது அனை­வரும் அறிந்த விட­ய­மாகும். 

இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லு­ற­வையும், ஒற்­று­மை­யையும் யுத்த சூழ்­நி­லையே இல்­லாமற் செய்­தது. யுத்­தத்தின் பின் நாம் யுத்­தத்தின் கார­ண­மாக இல்­லாமற் போன இனங்­க­ளுக்­கி­டை­யி­லான சமா­தானம், ஒற்­றுமை மற்றும் நம்­பிக்கை என்­ப­வற்றை மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப தேசிய நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுக்க வேண்டும். 

இந்­நி­லையில் அர­சியல் சுய­லாபம் கருதி அடிப்­ப­டை­வா­திகள் சிலர் தற்­போது கட்­டி­யெ­ழுப்­பப்­பட்டு வரும் நல்­லி­ணக்­கத்தை சீர்குலைப்பதற்காக இனங்களுக்கிடையில் வெறுப்புணர்ச்சியை உருவாக்க முயல்கிறார்கள். இந்நிலைமை ஒரு போதும் எமது நாட்டிற்கு நன்மை பயக்காது எனத் தெரிவித்துள்ளார். 

Comments