திங்கட்கிழமை அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு வரவும்.
வரும் திங்கட்கிழமை அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 22ம் திகதி திங்கட்கிழமை காலை 08.00 மணிக்கு அனைத்து அமைச்சர்களும் வருகை தர வேண்டும் என்று ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமைச்சரவையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.


Comments
Post a Comment