தோப்பூர் நீணாக்கேணியில் பிக்குகள் தலைமையிலான குழு முஸ்லிம்களின் காணியில் அத்துமீறல்
-Ihzana Fareed
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் நீணாக்கேணி பிரதேசத்தில் முஸ்லிம்கள் பூர்வீகமாக பயிர்ச்செய்கை மேற்கொண்டு வசித்து வந்த குடியிருப்புக் காணியை அத்துமீறி பௌத்த மதகுருவும், பௌத்த இளைஞர் குழுவும் இயந்திரங்களின் உதவியோடு அபகரிக்க முனைந்தமையால் பதற்ற நிலை தோன்றியது.இச்சம்பவம் திங்கட்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.
காணியின் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த வேலிகள் இயந்திரங்களால் உடைத்தெறியப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து ஒன்று திரண்ட ஊர்மக்கள் மற்றும் பிக்குகளுக்கிடையே முறுகல் நிலை உக்கிரமடைந்தது.
இதனையடுத்து சேருநுவர பொலிஸார் நீதி மன்றத்தினை நாடி தீர்வைப் பெற்றுக்கொள்ளுமாறு இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.
தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த காணியின் உரிமையாளர்கள் 1959 ஆம் ஆண்டு எழுதப்பட்ட உரிமை ஆவணத்தை கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் நீணாக்கேணி பிரதேசத்தில் முஸ்லிம்கள் பூர்வீகமாக பயிர்ச்செய்கை மேற்கொண்டு வசித்து வந்த குடியிருப்புக் காணியை அத்துமீறி பௌத்த மதகுருவும், பௌத்த இளைஞர் குழுவும் இயந்திரங்களின் உதவியோடு அபகரிக்க முனைந்தமையால் பதற்ற நிலை தோன்றியது.இச்சம்பவம் திங்கட்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.
காணியின் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த வேலிகள் இயந்திரங்களால் உடைத்தெறியப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து ஒன்று திரண்ட ஊர்மக்கள் மற்றும் பிக்குகளுக்கிடையே முறுகல் நிலை உக்கிரமடைந்தது.
இதனையடுத்து சேருநுவர பொலிஸார் நீதி மன்றத்தினை நாடி தீர்வைப் பெற்றுக்கொள்ளுமாறு இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.
தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த காணியின் உரிமையாளர்கள் 1959 ஆம் ஆண்டு எழுதப்பட்ட உரிமை ஆவணத்தை கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Comments
Post a Comment