இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள்


பாணந்துறை; வெல்லம்பிட்டி பகுதிகளில் அதிகாலையில் சம்பவம்
பாணந்­துறை மற்றும் வெல்­லம்­பிட்டி பகு­தி­களில் இரு பள்­ளி­வா­சல்கள் மீது அடை­யாளம் தெரி­யாதோர் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். நேற்று முன் தினமும் நேற்றும் இவ்­விரு தாக்­குதல்  சம்­ப­வங்­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான , பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­குதல் சம்­ப­வங்கள் ஆரம்­பித்­து­விட்­ட­னவா என முஸ்­லிம்­க­ளி­டையே அச்ச நிலை தோன்றி­யுள்­ளது. 

இவ்­விரு சம்­ப­வங்கள் தொடர்­பிலும் வெவ்­வே­றான இரு சிறப்பு விசா­ர­ணை­களை பொலிஸார் ஆரம்­பித்­துள்­ளனர்.  பாணந்­துறை பழைய பஸார் பகு­தியில் உள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளி­டையே அமைக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சலின் மேல் மாடி பெற்றோல் குண்டுத் தக­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ள­துடன், வெல்­லம்­பிட்­டிய கொஹி­ல­வத்தை பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல் கல் வீச்சு தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

இந்த சம்­ப­வங்கள் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
நேற்று அதி­காலை 1.45 மணி­ய­ளவில் கொழும்பு – கொஹி­லாத்தை அல்­இப்­ரா­ஹிமிய்யா ஜும்ஆ பள்­ளி­வாசல் முன்­பக்க கேட்டும், பள்­ளி­வாசல் கதவும் உடைக்­கப்­பட்டு தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. இத்­தாக்­கு­தலை மோட்டார் சைக்கிள் ஒன்­றிலும், வேன் ஒன்­றிலும் வந்த இனந்­தெ­ரி­யாத 6 பேர் மேற்­கொண்­டுள்­ளனர். 

பள்­ளி­வாசல் உடைக்­கப்­பட்டு தாக்­கப்­ப­டு­வதை  தாக்­குதல் மேற்­கொண்­ட­வர்­களில் ஒருவர் வீடியோ பதிவு செய்­த­தாக நேரில் கண்ட சாட்­சி­யங்கள் பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூ­ல­ம­ளித்­துள்­ளன. தாக்­குதல் சம்­பவம் உட­ன­டி­யாக பள்­ளி­வா­சலில் தங்­கி­யி­ருந்த இமாம் மற்றும் பள்­ளி­வா­சலில் தங்­கி­யி­ருது பள்­ளி­வாசல் திருத்த வேலை­களைச் செய்­ப­வர்­களால் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கு தொலை­பேசி மூலம் அறி­விக்­கப்­பட்­டது. 

வெல்­லம்­பிட்­டிய பொலிஸார் உட­ன­டி­யாக ஸ்தலத்­துக்கு விரைந்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். 

பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கி­லுள்ள வீடுகள், தொழிற்­சாலைகள், காரி­யா­ல­யங்கள், வர்த்­தக நிலை­யங்­களின் சி.சி.ரி.வி கமெரா பதி­வு­களை பொலிஸார் பெற்­றுள்­ளனர். தட­யவியல் பொலிஸ் அதி­கா­ரிகள், தாக்­கு­தல்­களை மேற்­கொண்ட இடங்­களில் பதி­வா­கி­யுள்ள கைரேகை அடை­யா­ளங்­க­ளையும் பெற்­றுக்­கொண்­டுள்­ளனர். 

வெல்­லம்­பிட்­டிய பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சஞ்­சீவ, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் என்போர் ஸ்தலத்­துக்கு விஜயம் செய்­தனர். மேலும் கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் மற்றும் மேல் மாகாண சபை உறுப்­பி­னர்கள் அர்சாத் நிஸாம்தீன், எம்.ஜே.எம்.பாயிஸ் ஆகி­யோரும் பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம் செய்து சேத விப­ரங்­களைப் பார்­வை­யிட்­டனர். 

இந் நிலையில் நேற்றுக் காலை ஸ்தலத்­துக்கு சென்ற வெல்­லம்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான குழு­வினர் விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­துடன் பல கோணங்­களில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். மேல் மாகா­ணத்தின் தெற்கு பகு­திக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்­ர­ம­சிங்­கவின் மேற்­பார்­வையில் நுகே­கொடை வல­யத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் பிரசாத் ரண­சிங்­கவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக வெல்­லம்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான சிறப்பு பொலிஸ் குழு இந்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

கொஹி­ல­வத்த பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை உறுப்­பினர்
தாக்­கு­த­லுக்­குள்­ளான கொஹி­ல­வத்த அல் இப்­ரா­ஹிமிய்யா ஜும்ஆ பள்­ளி­வாசல் டிரஸ்டி ஏ.ஆர்.எம்.முதஸ்ஸிர் தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் விளக்­கு­கையில்;

‘திங்­கட்­கி­ழமை அதி­காலை 1.45 மணி­ய­ளவில் இனந்­தெ­ரி­யாத 6 பேர் மோட்டார் சைக்­கிள்களிலும், வேன் ஒன்­றிலும் வந்­துள்­ளார்கள். அவர்கள் பள்­ளி­வாசல் முன் கேட்டின் பூட்­டினை  உடைத்து உள்­நு­ழைந்து பள்­ளி­வாசல் கத­வி­னையும் உடைத்­துள்­ளார்கள். 

இச்­சம்­ப­வத்தில் பள்­ளி­வாசல் ஹஸ­ரத்தும், பள்­ளி­வாசல் திருத்த வேலை­க­ளுக்­காக வந்து தங்­கி­யி­ருந்­த­வர்­களும் விழித்து உடனே எங்­ளுக்குப் போன் பண்­ணி­னார்கள். நாம் அங்கு சென்ற போது அவர்கள் இருக்­க­வில்லை. தாக்­கு­தலை மேற்­கொள்ளும் போது ஹெல்மெட் அணிந்த ஒருவர் அதனை வீடியோ பண்­ணி­யுள்ளார். இது திட்­ட­மிட்ட தாக்­குதல், வெளி­யி­லி­ருந்து வந்­த­வர்­க­ளாலே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. 

உடன் பொலி­ஸுக்கு அறி­விக்­கப்­பட்­டது. சுமார் 20 பொலிஸார் வருகைத் தந்­தார்கள். பொலிஸ் பாது­காப்பு தொடர்ந்து வழங்­கப்­பட்­டுள்­ளது. தொடர்ந்தும் விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வா­ச­லுக்கு சி.சி.ரி.வி கமெரா பொருத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் மேற்­கொள்­ள­வுள்ளோம். பள்­ளி­வாசல் நிறப்­பூச்சு பணி­களை பூர்த்தி செய்து விட்டு கமெ­ராக்­களை பொருத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். 32 சி.சி.ரி.வி கமெ­ராக்கள் பொருத்­தப்­ப­ட­வுள்­ளன’ என்றார். 

கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் இத்­தாக்­கு­தலை கண்­டித்­துள்ளார். "இத்­தாக்­குதல் புதிய முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. தாக்­கு­தலை நடத்திக் கொண்டே அதனை வீடியோ பதிவு செய்­துள்­ளார்கள். எனவே இத்­தாக்­கு­தலில் ஏதோ சூழ்ச்சி இருக்­கி­றது என நம்­பு­கிறோம். 

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் நிதி­யத்­தி­லி­ருந்து வளம் குறைந்த பள்­ளி­வா­சல்கள் அனைத்­திற்கும் சி.சி.ரி.வி கமெரா கொள்­வ­னவு செய்­வ­தற்கு பணம் ஒதுக்­கப்­பட வேண்­டு­மென அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கா­ரங்கள் அமைச்சர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் ஆகி­யோ­ரிடம் கோரிக்கை விடுக்­கிறேன்" என்றார்.  

பாணந்துறை 
இத­னி­டையே பாணந்­துறை பகு­தியில் பள்­ளி­வாசல் மீதான தாக்­கு­த­ல் நேற்று முன் தினம் அதி­காலை இடம்­பெற்­றுள்­ளது.

நேற்று முன் தினம்  அதி­காலை 3.00 மணி­ய­ளவில் பள்ளி வாச­லுக்கு பின்­பு­ற­மாக உள்ள யன்னல் வழி­யாக மேல்­மா­டியின் கண்­ணா­டியை உடைத்து பெற்றோல் குண்டு வீசப்பட்டே இந்த தக­குதல் நடத்­தப்பட்­டுள்­ளது. இதன் போது பள்­ளி­வா­சலின் மேல் மாடிக்கு செல்லும் படிகள் கடு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ளன. 

குறித்த முஸ்லிம் பள்­ளி­வாசல்  அமைந்­துள்ள பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான  வீடுகள் எவையும்  இல்லை. எனினும் குறித்த பிர­தே­சத்தில் 50 இற்கும் மேற்­பட்ட முஸ்­லிம்­களின் வியா­பா­ரஸ்­த­லங்கள் காணப்­ப­டு­கின்­றன. வர்த்­த­கர்கள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு வருவோர் தொழு­கை­களை நிறை­வேற்றும் முக­மா­கவே இந்தப் பள்­ளி­வாசல் கடை­க­ளி­டையே அமைக்­கப்­பட்­டுள்­ளது. இப்­பள்­ளி­வா­ச­லுக்கு பின் பக்­க­மாக பாணந்­துறை குப்பை மேடு அமைந்­துள்ள நிலையில் அப்­ப­கு­தியை நோக்கி பள்­ளி­வா­சலில் ஜன்னல் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஜன்­னலே உடைக்­கப்­பட்டு மேல் மாடிக்கு பெற்றோல் பெற்றோல் குண்டு வீசி தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

சம்­பவம் தொடர்பில் குறித்த பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் உள்ள சிங்­கள மக்கள் பொலிஸ் நிலை­யத்­திற்கு தொலை­பேசி மூலம் அறி­யப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்தே பொலிஸார் ஸ்தலம் சென்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.  இந்த சம்­பவம் குறித்தும் பாணந்­துறை பொலிஸார் ஊடாக சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

மத ஸ்தலங்கள் மற்றும் மத விவ­கா­ரங்கள் தொடர்பில் அத்து மீறல்­களை முன்­னெ­டுப்­போ­ருக்கு எதிஒராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அது தொடர்பில் விஷேட விசாரணைகளை  நடத்தவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Comments