இன­வி­கி­தா­சா­ரத்­திற்கு ஏற்­ற­வ­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு காணி வழங்க வேண்டும்


தீர்­மானம் நிறை­வேற்றம்

முஸ்­லிம்கள் மாவட்ட அடிப்­ப­டையில் வாழ்ந்து கொண்­டி­ருக்கும் விகி­தா­சா­ரத்­திற்கு ஏற்ப காணிகள் சட்­டப்­படி வழங்க வேண்­டு­மென்ற தீர்­மானம் கிழக்கு மக்கள் அவை­யத்­தினால் இறக்­கா­மத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சி­னைகள் பற்றிய கலந்­து­ரை­யா­டலில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

நேற்று முன் தினம் இரவு நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் எம்.ரி.ஹஸன்­அலி, அக்­கட்­சியின் முன்னாள் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத், அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபையின் முன்னாள் தவி­சாளர் ஏ.எம்.அன்சில், தேசிய காங்­கி­ரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் எம்.எஸ்.உது­மா­லெப்பை, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தவி­சாளர் பிரதி அமைச்சர் எம்.அமீ­ரலி, அக்­கட்­சியின் பிரதித் தலை­வரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான ஏ.எம்.ஜெமீல், செய­லாளர் எம்.சுபைதீன் ஹாஜியார், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் (எஸ்.எஸ்.பி) அப்துல் மஜீத் உட்­பட பொது அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்­டார்கள். அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்கள் எதிர் கொள்ளும் காணிப் பிரச்­சி­னையை ஆராய்ந்து ஆவ­ணங்­களை தயா­ரித்துக் கொள்­வ­தற்கு குழு­வொன்றும் உரு­வாக்­கப்­பட்­டது.

இங்கு உரை­யாற்­றிய முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத்,
இந்தப் பிரச்­சினை தனியே அர­சியல் பிரச்­சி­னை­யல்ல. பாலஸ்­தீ­னத்தில் நடை­பெற்ற அத்­து­மீறல் குடி­யேற்­றங்கள் போல் தொடர்ச்­சி­யாக வாழ்ந்து கொண்­டி­ருக்கும் மக்­களை துரத்தி, தூர­மாக்கி, அந்த மக்கள் ஒட்­டு­மொத்த நிலத்­திற்கும் சொந்­தக்­கா­ரர்கள் அல்ல என்­றாக்­கி­வி­டு­வ­து என்­பது சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட காலத்தில் பேரி­ன­வா­தி­களின் நீண்ட காலத்­திட்­ட­மாகும். 

சிங்­கள மக்­க­ளுக்கு பெரிய அளவில் நிலங்கள் உள்­ளன. அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணையுடன் சட்­டத்தை மீறி சிறு­பான்­மை­யி­னரின் நிலங்­களை கபளீ கரம் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனை ஏன் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்றால், பெரும்­பான்மை என்­பது தலை­களை மாத்­திரம் எண்ணி எடுக்கும் விட­ய­மல்ல.

இந்த நாட்டில் மூன்று பெரும்­பான்­மை­யினர் உள்­ளனர். ஒன்று சிங்­களப் பெரும்­பான்­மை­யினர், இரண்டு தமிழ்ப் பெரும்­பான்­மை­யினர், அடுத்­தது முஸ்லிம் பெரும்­பான்­மை­யினர். இலங்கை முழு­வதும் சிங்­க­ள­வர்கள் பெரும்­பான்­மை­யா­கவும், வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் என்று பார்க்கும் போது தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யா­கவும், கிழக்கைப் பார்க்கும் போது முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யா­கவும் உள்­ளார்கள்.

இந்தப் பெரும்­பான்மை சமன்­பாட்டை இல்­லாமல் செய்ய வேண்­டு­மென்­பதே சிங்­கள பேரி­ன­வா­திகள் திட்­ட­மாகும். மாவட்ட ரீதி­யா­கவும், மாகாண ரீதி­யா­கவும், நாடு முழு­வ­திலும் சிங்­க­ள­வர்­களே பெரும்­பான்­மை­யி­ன­ராக உள்­ளார்கள் என்று நிறு­வுவதற்­கா­கவே சிறு­பான்­மை­யி­னரின் நிலங்­களை ஆக்­கி­ர­மித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

இன்று தமி­ழர்­களை ஆட்டி வைக்க முடி­யா­தென்­ப­தனை சர்­வ­தேசம் உணர்ந்­துள்­ளது. இந்­தி­யா­வி­னதும், சீனா­வி­னதும் ஆதிக்­கத்தை இந்த நாட்டில் நிலை நாட்­டு­வ­தற்கு முனைந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

முஸ்­லிம்கள் மத்­தியில் பீதியை ஏற்­ப­டுத்தி முஸ்­லிம்­களை ஆட்டி வைக்க எண்­ணு­கின்­றார்கள். எனவே, நாங்கள் பொறுப்­புடன் செயற்­படவேண்டும். எம்­மி­டையே காணப்­படும் கட்சி வேறு­பா­டுகள், பிர­தேச வேறு­பா­டுகள் போன்ற எல்லா வேறு­பா­டு­க­ளையும் மறந்து முஸ்லிம் சமூ­கத்தின் எழுச்­சிக்கும், எதிர்காலத்­திற்கும் ஒற்­று­மைப்­பட வேண்டும். ஒற்­று­மைப்­ப­டாது எத­னையும் சாதிக்க முடி­யாது.
பிரதி அமைச்சர் எம்.அமீ­ரலி உரை­யாற்­று­கையில்,

காணிப் பிரச்­சினை அம்­பாறை மாவட்­டத்தில் மாத்­தி­ர­மின்றி மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, மன்னார் என எல்லா மாவட்­டங்­க­ளிலும் முஸ்­லிம்கள் காணிப் பிரச்­சி­னை­களை எதிர் கொள்­கின்­றார்கள். பேரி­ன­வா­தி­க­ளி­னதும், இன­வா­தி­க­ளி­னதும் இந்த சூழ்ச்­சி­யி­லி­ருந்து முஸ்­லிம்­களைப் பாது­காத்துக் கொள்­வ­தற்கு தலை­வர்கள் முன்வருதல் வேண்டும். இதனை நாங்கள் பிரிந்து நின்று சாதிக்க முடி­யாது. கட்­சி­க­ளுக்கு அப்பால் சமூ­கத்­திற்­காக ஒற்­று­மைப்­பட வேண்­டி­யுள்­ளது. 

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.அதா­வுல்லாஹ் பேசு­கையில்,
யார் ஆட்­சிக்கு வந்­தாலும் முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும் தொடர்ச்­சி­யாக பாதிக்­கப்­பட்டு வந்­துள்­ளார்கள். இப்­போது முஸ்லிம் சமூகம் திட்­ட­மிட்டு குறி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதனால் புத்­தி­ஜீ­விகள் எல்­லோரும் ஒன்­று­பட வேண்டும். அதற்கு அமை­வாக இந்த அவையம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

எல்லா அர­சி­யல்­வா­தி­களையும் இணைக்க வேண்­டு­மென்றும் இந்த அவையம் தீர்­மானம் எடுத்­துள்­ளது. இது போன்று எல்லா மாவட்­டங்­க­ளிலும் அமைய வேண்டும். பின்னர் தலை­வர்கள் சபை ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்றும் தீர்­மா­னித்­தார்கள். 

அர­சியல் தீர்வு விட­யங்­களில் எல்லா மாவட்­டங்­க­ளிலும் உள்ள முஸ்­லிம்கள் பாதிக்­காத வகையில் தீர்­மா­னங்கள் எடுக்க வேண்டும். கிழக்கு மாகா­ணத்தைப் பொ­றுத்த வரை கொழும்­பிலோ, கண்­டி­யிலோ இருந்து கொண்டு வடக்கும், கிழக்கும் இணையட்டும் கரை­யோர மாவட்டம், வடக்கும், கிழக்கும் பிரி­யட்டும் என்று தீர்­மானம் எடுக்க முடி­யாது. நாங்கள் எவ்­வாறு இருக்க வேண்­டு­மென்று கிழக்கு மாகாண முஸ்­லிம்­கள்தான் தீர்­மா­னிக்க வேண்டும்.

காணிப் பிரச்­சினை குறித்து மேல் எழுந்­த­வா­ரி­யாக அர­சி­ய­லுக்கு வாக்கு எடுக்கும் ஒரு விட­ய­மாக அதனை ஆக்கிக் கொள்­வ­தற்கு முஸ்­லிம்­களும், புத்­தி­ஜீ­வி­களும் அதற்கு உடந்­தை­யாக இருக்க முடி­யாது. 

காணி விட­யத்தில் நாங்கள் ஒரு தீர்­மா­னத்தை எடுக்க வேண்டும். இலங்­கையில் வாழ்­கின்ற முஸ்­லிம்கள் அதிகம் காணி கேட்­க­வில்லை. மாவட்ட அடிப்­ப­டையில் முஸ்­லிம்கள் வாழ்­கின்ற விகி­தா­சா­ரத்­திற்கு அமை­வாக சட்­டப்­படி காணிகள் வழங்க வேண்­டு­மென்ற தீர்­மா­னத்தை இங்கு எடுக்க முடி­யு­மென்று நினைக்­கின்றேன். (இதற்கு எல்லா கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும், ஏனை­ய­வர்­களும்  சம்­மதம் தெரி­வித்துக் கொண்­டார்கள்) அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் குடி­யேறக் காணி­யில்லை.

எல்லா கட்­சி­களின் கிழக்கு மாகாண உறுப்­பி­னர்கள் இங்குள்ளார்கள். முஸ்லிம் காங்கிரஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் இந்த அவையத்தில் சேர்ந்தாக வேண்டுமென்று அழைப்புவிடுக்கின்றேன்.

நாங்கள் சமூகத்திற்காக ஒன்றுபட்டுள்ளோம். அரசியல் நோக்கம் எங்களுக்கு இன்னும் வரவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் எங்களுடைய கட்சியாகும்.

இக்கலந்துரையாடலில் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன்அலி, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி பாறூக் உட்பட பலர் உரையாற்றினார்கள்.

(நிந்­தவூர் நிருபர்)

Comments