கட்­டா­ரி­லுள்ள இலங்­கை­யர்­க­ளுக்கு உணவு பிரச்­சி­னைகள் ஏதும் இல்லை


சிக்கல்கள் இருப்பின் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் தலதா
கட்­டாரில் இருக்கும் இலங்­கை­யர்­க­ளுக்கு உணவு பிரச்­சி­னைகள் ஏதும் இல்லை. அவ்­வா­றான நிலைமை ஏற்­பட்டால் அவர்­களை நாட்­டுக்கு அழைத்­து­வர நட­வ­டிக்கை எடுப்போம் என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

மத்­திய கிழக்கில் 8அரபு நாடுகள் கட்­டா­ரு­ட­னான ராஜ­தந்­திர உற­வு­களை நிறுத்­திக்­கொண்­டுள்­ள­துடன் கட்­டா­ருக்­கான உணவு பொருட்கள் ஏற்­று­மதி செய்­வ­தையும் நிறுத்­திக்­கொண்­டுள்­ளன. அதனால் கட்­டாரில் தொழில் புரியும் இலங்­கை­யர்கள் உணவு பிரச்­சி­னைக்கு முகம்­கொ­டுத்­து­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­படும் செய்தி தொடர்­பாக வின­வி­ய­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

இது­தொ­டர்­பாக அவர் மேலும் கூறு­கையில்,
கட்டார் அர­சாங்கம் பயங்­க­ர­வா­தத்­துக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக தெரி­வித்து மத்­திய கிழக்கில் இருக்கும்  8அரபு நாடுகள் கட்­டா­ரு­ட­னான அனைத்து ராஜ­தந்­திர உற­வு­க­ளையும் முறித்­துக்­கொண்­டுள்­ளன.

இதன் கார­ண­மாக கட்­டா­ருக்கு உண­வுப்­பொ­ருட்கள் செல்­வது ஓர­ளவு தடைப்­பட்­டுள்­ள­தா­கவே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

என்­றாலும் கட்­டாரில் ஒரு இலட்­சத்தி 40ஆயிரம் இலங்­கை­யர்கள் தொழில் புரி­கின்­றனர். அவர்­க­ளுக்கு உண­வுப்­பி­ரச்­சினை ஏற்­பட்­டுள்­ள­தாக எந்த தக­வலும் கிடைக்­க­வில்லை. அவ்­வாறு உணவு பிரச்­சினை ஏற்­படும் நிலை வரு­மாக இருந்தால் அவர்­களை உட­ன­டி­யாக நாட்­டுக்கு அழைத்­து­வர நட­வ­டிக்கை எடுப்போம்.

அத்­துடன்  கட்­டாரில் இருக்கும் இலங்­கை­யர்கள் நாட்­டுக்­கு­வரத் தேவை­யாக இருந்தால் எமது தூத­ர­கத்தில் தெரி­விக்­கு­மாறு அறி­வித்­துள்ளோம். கட்­டாரில் தொழில் புரி­ப­வர்கள் தூத­ர­கத்­துடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள முடியும். யாருக்­கா­வது பிரச்­சினை இருந்தால் அவர்­களை நாட்­டுக்கு அழைத்­து­வர நட­வ­டிக்கை எடுப்போம்.

இதே­வேளை, கட்டார் பிரச்­சி­னைக்கு தீர்வு உட­ன­டி­யாக காண்­ப­தற்­காக குவைட் அர­சாங்கம் முன்­வந்து பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்­துள்­ளது.

அத்துடன் கட்டாரில் இருக்கும் அனைத்து நாடுகளின் தூதுவர்களையும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.

Comments