இரண்டு பசு மாடுகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது

முபாரக்

கந்தளாய் பொலிஸ் பிரிவில் இரண்டு பசு மாடுகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் 29 வயதுடைய ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (11) பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தனது வீட்டு வளவில் கட்டப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகள் திருட்டுப் போயுள்ளது என்று பொலிஸாரிடம் அதன் உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார்.

 இது தொடர்பில் விசாரணை செய்து சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், திருடப்பட்ட அப்பசு மாடுகளையும் மீட்டுள்ளதாகவும் கூறினர். இப்பசு மாடுகளை வேறு பகுதிக்கு கொண்டுசென்று, சந்தேக நபர் விற்பனை செய்யவிருந்தார் எனவும் பொலிஸார் கூறினர்.

Comments