தமிழ் - முஸ்லிம் அமைச்சர்களும் வெறுப்புணர்வை தூண்டுகின்றனர்


அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

பொது­ப­ல­சே­னாவின் ஞான­சா­ர­தேரர் மாத்­தி­ர­மல்ல, அவ­ரைப்போல் முஸ்லிம், தமிழ் அமைச்­சர்­களும் எம்­பிக்­களும் வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் பேச்­சுக்­களை பேசு­கி­றார்கள்.

இது தொடர்­பாக விசா­ரணை நடத்தி சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­சரும் ஜாதிக ஹெல உறும­யவின் செய­லா­ள­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். 

பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள ஜாதிக ஹெல உறு­ம­யவின் அலு­வ­லகத்தில் நேற்று மதியம் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு
உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். 

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;
முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் தாக்­குதல் தொடர்­பான சந்­தே­கத்தின் பேரில் பொலிஸார் சிலரை கைது செய்­துள்­ளார்கள். என்­றாலும் பொலி­ஸாரின் முன்­னெ­டுப்­புகள் போதாது. அவர்கள் துரி­த­மாக செயற்­ப­ட­வேண்டும்.

எமது நாட்டில் ஜன­நா­ய­கத்­துக்கு சவால்­விடும் சில குழுக்கள் இயங்கி வரு­கின்­றன. இந்தக் குழுக்கள் உலகில் தீவி­ர­வாத குழுக்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வை­க­ளாகும். 

இவ்­வா­றான குழுக்­களின் செயற்­பா­டுகள் தொடர்­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது.  நாட்டின் சட்­டத்தை மீறி செயல்­ப­டு­பவர்கள் அவர்கள் யாராக இருந்­தாலும் சட்டம் கடு­மை­யாக அமுல் நடத்­தப்­ப­ட­வேண்டும். 

முஸ்­லிம்கள் தமது கடைகள், பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எதி­ராக 25 சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறு­கி­றார்கள். இந்­துக்கள் கிழக்கில் 61 கோயில்கள் அழிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறு­கி­றார்கள். கிறிஸ்­த­வர்கள் தங்கள் ஆல­யங்கள் அழிக்­கப்­பட்­டுள்­ளன என்­கி­றார்கள். பௌத்­தர்கள் தங்கள் தொல்­பொருள் பிர­தே­சங்கள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அழிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் முறை­யி­டு­கி­றார்கள்.

இச்­சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் இருக்க வேண்டும். பொலிஸார் இந்த சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை தரா­தரம் பாராது கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும். 

இலங்­கையில் மாத்­தி­ர­மல்ல உல­கெங்கும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடந்­தே­று­கின்­றன. ஜேர்­ம­னியில் 97 பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. இதே­போன்று இங்­கி­லாந்து, அவுஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்­காவில் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான், ஈராக்கில் கிறிஸ்­த­வர்கள் ஆயி­ரக்­க­ணக்கில் கொலை செய்­யப்­ப­டு­கி­றார்கள். ஷியா – சுன்னி கல­வ­ரத்தில் அநேகர் இறக்­கி­றார்கள். 

ஞான­சா­ர­தே­ரரை நான் ஒளித்து வைக்­க­வில்லை
ஞான­சார­தே­ரரை நான் பாது­காக்­க­வில்லை.  ஒளித்து வைக்­க­வில்லை. ஞான­சா­ர­தே­ரரை ஒளித்து வைக்க வேண்­டிய தேவை­யு­மில்லை. ஞான­சா­ர­தேரர் ஜாதிக ஹெல உறு­மய கட்­சியில் இருந்து 2004 ஆம் ஆண்டு விலகிச் சென்றார். நாம் பிக்­கு­க­ளுடன் செயற்­படும் போது அவர்­க­ளுக்கு கௌர­வ­ம­ளிக்கும் வகையில் செயற்­பட்டோம். ஞான­சா­ர­தேரர் எம்­முடன் இருக்கும் போது எவ்­வித பிரச்­சி­னையும் ஏற்­ப­ட­வில்லை. 

2004 இல் எம்­மி­ட­மி­ருந்து பிரிந்து சென்ற ஞான­சா­ர­தேரர் 2005 இல் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து கொண்டார். பின்பு 2010 இல் சரத்­பொன்­சே­கா­வுடன் செயற்­பட்டார். அதன் பின்பு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ர­வா­ள­ரானார். திஸ்ஸ­  விதா­ரண ஞான­சா­ர­தேரர் தொடர்பில் என்னை குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

ஆனால் ஞான­சா­ர­தேரர் மஹிந்த ராஜபக் ஷவுடன் இருந்த போது திஸ்­ஸ­வி­தா­ர­ணவும் கூட இருந்தார். யார் ஞான­சார தேர­ருக்கு பத­விகள் வழங்­கி­யது, வாகனம் வழங்­கி­யது என்று திஸ்­ஸ­வி­தா­ர­ண­வுக்குத் தெரியும். கோதா­பய ராஜபக் ஷவும் மஹிந்த ராஜபக் ஷவும் அன்று அவ­ருக்கு அடைக்கலம் வழங்கியிருந்தார்கள். 

மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இணைந்த எதிர்க்கட்சியினருக்கும் சட்ட ஆலோசனை வழங்கும் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரே ஞானசாரதேரரின் சட்டத்தரணியாக செயற்படுகிறார்.

அப்படியென்றால் எப்படி நான் ஒளித்து வைக்க முடியும். அரசியல் சேறு பூசுவதற்காகவே என் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.   

மஹிந்த ராஜபக் ஷ இப்போதாவது நேர் பாதையில் பயணிக்க வேண்டும் என்றார். 

Comments