தராவிஹ் தொழுகைக்கு செல்வதில் பெரும் அச்சம் – முன்னாள் அமைச்சர் அஸ்வர்


நாட்டில் முஸ்லிம் சமூகம் முன்­னெப்­போதும் இல்­லா­த­வாறு அச்­சத்­து­டனும், பீதி­யு­டனும் நாட்­களைக் கடத்­து­கி­றது.

பெரும்­பான்மைச் சமூகம் வாழும் பிர­தே­சங்­க­ளி­லுள்ள முஸ்லிம் பெண்கள் இரவில் தராவீஹ் தொழு­கைக்கு கூட செல்­வ­தற்குப் பயப்­ப­டு­கின்­றனர்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் ஜனா­தி­ப­தியை உட­ன­டி­யாகச் சந்­தித்து இந்­நி­லைமையைத் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என முன்னாள் அமைச்­சரும் முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­ப­ரு­மான ஏ.எச்.எம்.அஸ்வர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

நாட்டின் பல பகு­தி­களில் தொட­ராக இடம்­பெற்று வரும் பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­தல்கள் தொடர்பில் ஏ.எச்.எம்.அஸ்வர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சேன சர்­வ­மத தலை­வர்­களை அழைத்து மதங்­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டுகள் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு முன்பு முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும், வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் எதி­ரான தாக்­கு­தல்கள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும். இதற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் உட­ன­டி­யாக ஜனா­தி­ப­தியை சந்­தித்து இது தொடர்பில் தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

ஜனா­தி­ப­தியை முஸ்லிம் அமைச்­சர்கள் தனித்­த­னியே சந்­தித்து முஸ்­லிம்­களின் சம­கால பிரச்­சி­னை­களை முன்­வைப்­பதில் எந்தப் பயனும் ஏற்­படப் போவ­தில்லை.

ஒவ்­வொரு வரு­டமும் ரமழான் காலத்­திலே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் கட்­ட­விழ்த்து விடப்­ப­டு­கின்­றன. நாட்டில் ஓர் அசா­தா­ரண நிலையை உரு­வாக்­கு­வ­தற்கு இன­வாதக் குழுக்கள் திட்­ட­மிட்டு செயற்­பட்டு வரு­கின்­றன. எனவே அர­சாங்கம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்ய வேண்டும்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­கின்­றன. வர்த்­தக நிலை­யங்கள் எரிக்­கப்­ப­டு­கின்­றன என்று கோஷ­மெ­ழுப்­பப்­பட்­டது. முஸ்­லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆட்­சியில் அமர்த்­தி­னார்கள். ஆனால் இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திலே முஸ்­லிம்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

அச்­சத்­து­டனும், பீதி­யு­டனும் வாழ வேண்டியேற்பட்டுள்ளது. நபிகள் நாயகம் மற்றும் அல்லாஹ்வுக்கு எதிராக கோஷமெழுப்பப்படுகிறது.

குர்ஆன் அவமதிக்கப்படுகிறது. எனவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் பொறுமை காக்கக்கூடாது. மௌனம் சாதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments