பெற்றீசுக்குள் தங்க மோதிரம்; மட்டக்களப்பில் சம்பவம்!


-பாறுக் ஷிஹான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல  பேக்கரி யொன்றில் வாடிக்கையாளர் ஒருவர்  கொள்வனவு செய்த   பெற்றீசுக்குள் இருந்து  தங்கமோதிரம் ஒன்று பெறப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை (18) இடம்பெற்ற இச்சம்பவத்தில் தங்க மோதிரத்தின் உரியவர் அதற்குரிய ஆவணங்களோடு வந்தால் ஒப்படைக்கவும் தயார் என கொள்வனவு செய்தவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பின் பல ஹோட்டல்களில் உணவுப்பொருட்களுக்குள், பீடி, இரும்புத்துண்டு என பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ள அதேவேளை தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

Comments