அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வில் உள்­ளூ­ராட்சி மன்ற சட்­ட­மூலம்

எம்.ஆர்.எம்.வஸீம்)

பின்னர் தேர்தல் அறிவிப்பு என்கிறார் அமைச்சர் பைஸர்
உள்­ளூ­ராட்சி மன்ற சட்­ட­மூலத்தை அடுத்த பாரா­ளு­மன்ற  அமர்­வின்­போது சமர்ப்­பிக்­க­வுள்­ளோம். பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­காரம் கிடைத்­ததும் தேர்­தல்கள் ஆணைக்­குழு தேர்­தலை அறி­விக்க முடியும் என உள்­ளூ­ராட்சி மற்றும் மாகா­ண­ச­பைகள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,
உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்­பான சட்­ட­மூ­லத்தில் உரிய திருத்­தங்­களை மேற்­கொண்டு தற்­போது பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்­துள்ளோம்.

இந்­நி­லையில் கட்சி தலைவர்களின் கூட்­டங்­க­ளின்­போது சில கட்­சிகள் சட்­ட­மூ­லத்தில் ஒரு­சில திருத்­தங்­களை மேற்­கொள்ள எதிர்­பார்க்­கின்­றன. அத்­துடன் தேர்தல் முறை­மையில் திருத்­தங்­களை மேற்­கொள்­ளவும் அனைத்து கட்­சி­களும் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்­ளன. 

மேலும் தேர்தல் பிற்­ப­டுத்­தப்­ப­டு­வது தொடர்­பாக அர­சாங்­கத்­துக்கு குறை கூறி­வந்­த­வர்­க­ளுக்கு தற்­போது அதன் உண்மை நிலை தெரி­ய­வந்­துள்­ளது. குறிப்­பாக எல்லை நிர்­ணயம் மேற்­கொள்­ளும்­போது இருந்த பிரச்­சினை மற்றும் தொகு­தி­வாரி முறை தேர்­தலில் சிறு கட்­சி­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய அநீதி தொடர்­பான விட­யங்கள் தீர்க்­கப்­ப­ட­வேண்­டி­யி­ருந்­தன. 

மேலும் அடுத்த பாரா­ளு­மன்ற அமர்­வின்­போது குறித்த சட்­ட­மூலம் சபைக்கு சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. சட்­ட­மூ­லத்­துக்கு பாரா­ளு­மன்றம் அங்­கீகாரம் வழங்கி 55நாட்­க­ளுக்குள் தேர்­தல்கள் ஆணைக்­குழு தேர்­தலை அறி­விக்­க­வேண்டும். 

அத்­துடன் இம்­முறை உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் அனைத்து மன்­றங்­களில் இருந்தும் 25வீத­மான பெண்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­த­வுள்­ளமை விசேட அம்­ச­மாகும். இதற்கு அனைத்து கட்­சி­களும் இணக்கம் தெரி­வித்­துள்­ளன.

கட்­சியின் செய­லாளர் துமிந்த திஸா­நா­யக்க கருத்­து­தெ­ரி­விக்­கையில், ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில்  கை சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தென்றே தீர்­மா­னித்­துள்­ளது.

என்­றாலும் எம்­முடன் பல கட்­சிகள் இணைந்­தி­ருப்­பதால் அந்த கட்­சி­க­ளுடன் இணைந்து தேர்­த­லுக்கு செல்லும் நிலை ஏற்­பட்டால் எந்த சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தென்று கலந்­து­ரை­யாடி தீர்­மானம் எடுக்கப்படும். 

அத்துடன் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை. அவ்வாறானதொரு எண்ணமும் எங்களுக்கில்லை. கடந்த பொதுத்தேர்தலிலும் நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகவே போட்டியிட்டோம் என்றார்.

Comments