சாகும் வரை உண்ணா விரதம் இருப்பேன்  எனும் போராட்டத்தில் குதித்த  இறக்காமம் ஊர்காவல் படை அதிகாரி.

mohamed Rizwan

இந்த நால்லாட்சியில் தனக்கு நீதி கிடைக்கா விட்டால்
சாகும் வரை உண்ணா விரதம் இருப்பேன்
 எனும் போராட்டத்தில் குதித்த  இறக்காமம் ஊர்காவல் படை அதிகாரி.

இன்று 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2.00 மணியளவில் இறக்காமம் ஆலையடிச் சந்தியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சிவில் பாதுகாப்பு படை பிரிவில் கடமை புரிந்து வந்த நியாஸ்  என்பவர் தெரிவித்தார்

 குறித்த நபர் சுகயினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வைத்திய அறிக்கை மூலம் ஓய்வெடுத்து வந்த வேளையில் இப் படை வீரர் எத்த ஒரு முன்னறிவித்தலும் இன்றி வர்ணக்குலசூர்ய என்னும் உயர் அதிகாரியினால் தற்காலிகமாக சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டார்
 என்றும் தனக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அநீதி இழைக்கப்பட்டதனால் மனவேதனப்பட்டு குறித்த அதிகாரியினால் தனக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என உண்ணா விரத போராட்டம் மூலம் தனது கோரிக்கையை விடுக்கின்றார்.


Comments