பொலிஸ் பரிசோதகர் வேடமிட்டு வந்த வடக்கு ஆளுனர்

பாறுக் ஷிஹான்-

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே பொலிஸ் உடையில் தோன்றி இன்று(29) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆவணப் படம் ஒன்றுக்காக பொலிஸ் பரிசோதகர் வேடமிட்டு படப்பிடிப்பு ஒன்றிற்காக யாழில் உள்ள விருந்தினர் விடுதிக்கு வருகை தந்திருந்தார்.
இவருடன் பாதுகாப்பிற்காக ஏனைய நாடக கலைஞர்கள் பொலிஸ் உடை தரித்த வண்ணம் பாதுகாப்பு அளித்து வந்தனர்.

இந்நிலையில் ஆளுநரின் இந்த வேடத்தை பார்த்த மக்கள் பல ஊகங்களை எழுப்பிய வண்ணம் உரையாடிக்கொண்டிருந்தனர்.

Comments