யாரோ ஒரு வியாபாரி இறக்குமதி செய்த சீனியில் போதை பொருள் இருந்தால் அமைச்சர் றிசாத் அதற்கு காரணம் என்று கூறுவது முட்டாள் தனம்
ihzana Faered
யாரோ ஒரு வியாபாரி இறக்குமதி செய்த சீனியில் போதை பொருள் இருந்தால் அமைச்சர் றிசாத் அதற்கு காரணம் என்று கூறுவது முட்டாள் தனம்.முஸ்லிம் சமூகத்தில் உள்ள முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் வாதிகளைப் பார்த்து சிரிப்பதா அல்லது அழுவதா என்றுள்ளது இன்றைய நிலைமை.இவ்வாறு தேசிய ஜனநாயக கட்சி மனித உரிமைகள் இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அன்மையில் வெளிவந்த ஹசன் அலி மற்றும் தவம் வெளியிட்ட செய்திகள் பற்றி கூறினார்
யாரோ ஒருவன் வியாபாரி இறக்குமதி செய்த சீனியில் போதை பொருள் இருந்தால் அமைச்சர் றிசாத் அதற்கு காரணம் என்று கூறுவது முட்டாள் தனம் . களவு செய்யும் போது ஒரு சாதாரண தொழிலாலி கண்டு பிடிக்கும் அளவு செய்வதுக்கு அமைச்சர் றிசாத் அப்படி ஒரு முட்டாள் அல்ல.
இதில் சம்பந்தப் பட்டவர்கள் ஏற்றுமதியாளனும் , இறக்குமதியாளனுமே அன்றி அமைச்சர் றிசாத் இல்லை . இடையில் நம் அரசியல்வாதிகள் இதில் மூக்கை நுழைப்பது முஸ்லீம் சமூகத்துக்கு ஆரோக்கியம் இல்லை என்றே நான் கூறுவேன்
கிழக்கு மாகாண சபை தவம் கூறுகிறார் ரிசாத்தின் அமைச்சுப் பதவி பறிக்கப் பட வேண்டும் என்று , ஹசன் அலி கூறுகிறார் அமைச்சர் ஹக்கீம் தலைமைப் பதவிக்கு தகுதி இல்லை என்று. இவர்களது கருத்துக்களை நோக்கும் போது இவர்கள் பாதையோர அரசியல் வாதிகளை விட அறிவீனம் அற்றவர்களே என்று தோணுது.
இது பற்றி விசாரணைகள் நடந்து முடியும் வரை எமது கருத்துக்களை வெளி விடுவது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எனது கருத்து. இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்


Comments
Post a Comment