முஸ்லிம் கூட்டமைப்பு மு.கா.வை எதிர்க்கவா?


இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் முஸ்­லிம்கள் 1985 கள் வரைக்கும் இரு பெரும் தேசிய கட்­சி­க­ளுக்கே வாக்­க­ளித்து வந்­தி­ருக்­கி­றார்கள்.

அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுமே முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் தெரி­வாக இருந்து வந்­தன. 
இருந்­த­போ­திலும் நாட்டில் இனப் பிரச்­சி­னை­யொன்று தோற்றம் பெற்­றத்தைத் தொடர்ந்து முஸ்லிம் சமூ­கத்தின் தனித்­து­வ­மான அபி­லா­ஷை­க­ளுக்­காக குரல் கொடுக்கக் கூடிய தனித்­துவக் கட்­சியின் அவ­சியம் உண­ரப்­பட்­டது. இத் தரு­ணத்­தில்தான் மர்ஹூம் அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எனும்  கட்­சியை ஸ்தாபித்து அதனை பதிவு செய்­யப்­பட்ட தேசிய அர­சியல் இயக்­க­மா­கவும் வளர்த்­தெ­டுத்தார். 

எனினும் அவ­ரது மறை­வுக்குப் பிற்­பாடு முஸ்லிம் காங்­கி­ர­ஸினுள் ஏற்­பட்ட தலை­மைத்­துவ, பதவிப் போட்­டிகள் கார­ண­மாக அதா­வுல்லாஹ் தலை­மையில் தேசிய காங்­கி­ரஸும் ரிஷாத் பதி­யுதீன் தலை­மையில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் தோற்றம் பெற்­றன. 

இதற்­கப்பால் இந்த வருடம் புதி­தாக பதிவு செய்­யப்­பட்ட ஆறு அர­சியல் கட்­சி­க­ளுக்குள் முஸ்­லிம்­களால் நிர்­வ­கிக்­கப்­படும் இரு கட்­சி­களும் அடங்­கு­கின்­றன. அவை பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்­மானைத் தவி­சா­ள­ராகக் கொண்ட நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியும் முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் அஸாத் சாலியை செய­லா­ள­ராகக் கொண்ட தேசிய ஐக்­கிய முன்­ன­ணியும் ஆகும். இவற்­றுக்கு அப்பால் செயற்­பாட்டுக் களத்தில் இல்­லாத, ஆனால் முஸ்­லிம்­களின் பெயர்­களில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள மேலும் சில அர­சியல் கட்­சி­களும் உள்­ளன.

ஆக மொத்­தத்தில்  இந்த நாட்டில் மொத்­த­மாக பதிவு செய்­யப்­பட்­டுள்ள 70 அர­சியல் கட்­சி­களில் ஐந்து கட்­சிகள்  தற்­போது முஸ்லிம் சமூ­கத்தின் நலன்­களை முன்­னு­ரி­மைப்­ப­டுத்தி அர­சி­யலை முன்­கொண்டு செல்­வ­தற்­காக செயற்­பாட்டுக் களத்தில் உள்­ளன.  அந்த வகையில் இதனை முஸ்லிம் சமூ­கத்தின் பல­மாக ஒரு­புறம் கருத முடியும்.

ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக இதுவே முஸ்லிம் சமூ­கத்தின் பல­வீ­ன­மா­கவும் இன்று மாறி­யுள்­ளது. மேற்­படி அர­சியல் கட்­சிகள் வெவ்­வே­று­பட்ட கொள்­கை­க­ளுக்­கா­கவும் நலன்­க­ளுக்­கா­கவும் பிரிந்து நின்று செயற்­பட்டு வரு­வதன் கார­ண­மாக முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­களின் போது ஒற்­று­மைப்­பட்டு நின்று அவற்றை எதிர்­கொள்ள முடி­யாத நிலை தோற்றம் பெற்­றுள்­ளது. 

மேற்­படி கட்­சிகள் சமூ­கத்தின் நலன்­சார்ந்த விவ­கா­ரங்­களில் பொது உடன்­பா­டு­க­ளுக்கு வந்து செயற்­பட வேண்டும் என பல தரப்­பு­க­ளி­னாலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்ற போதிலும் அது நடை­மு­றைச்­சாத்­தி­ய­மற்­ற­தா­கவே தொடர்ந்து வரு­கி­றது.

இந் நிலை­யில்தான் தற்­போது 'முஸ்லிம் கூட்­ட­மைப்பு' எனும் பெயரில் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களை ஓர­ணியில் கொண்டு வரு­வ­தற்­கான முஸ்­தீ­பு­களும் கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் ஹஸன் அலி மற்றும் அக் கட்­சியின் முன்னாள் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் ஆகியோர் இந்த முஸ்லிம் கூட்­ட­மைப்­புக்­கான கதை­யா­டல்­களை தொடர்ந்து வரு­கின்­றனர்.  

அத்­துடன் ஏனைய கட்­சி­க­ளான தேசிய காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி ஆகி­ய­வற்­றுடன் முதற்­கட்ட பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ள­தா­கவும் கூறு­கின்­றனர். இருப்­பினும் இது விட­யத்தில் இன்­னமும் தெளி­வான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெ­ற­வில்லை என்­பதே யதார்த்­த­மாகும்.

இதற்­கி­டையில் பிர­தான முஸ்லிம் கட்­சி­யாகக் கரு­தப்­படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இந்த முஸ்லிம் கூட்­ட­மைப்பில் இணை­வ­தற்­கான எந்­த­வித சாத்­தி­யப்­பா­டு­க­ளு­மில்லை. அதனை அக் கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்­கீமின் வவு­னியா உரை உறு­திப்­ப­டுத்­து­கி­றது. தமது கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து சென்­ற­வர்கள் மு.கா.வுடன் மோது­வ­தற்கு எடுக்கும் முயற்­சியே இந்தக் கூட்­ட­மைப்பு என விமர்­சித்­தி­ருக்­கிறார்.

அதே­போன்­றுதான் முஸ்லிம் கூட்­ட­மைப்­பு­க­ளுக்­கான முயற்­சி­களை முன்­னெ­டுப்­போரும் மு.கா.வை அதில் இணைத்துக் கொள்ள ஒரு­போதும் விரும்பப் போவ­தில்லை என்­பதே யதார்த்­த­மாகும்.

அந்­த­வ­கையில் முஸ்லிம் கூட்­ட­மைப்பு என்­ப­தற்கு முஸ்லிம் காங்­கிரஸ் அதி­ருப்­தி­யா­ளர்­களின் கூட்­ட­மைப்­பா­கவோ அல்­லது மு.கா. எதிரிகளின் அணியாகவோ அமையுமாயின் அது முஸ்லிம் சமூகத்தில் இன்னுமின்னும் அரசியல் அனர்த்தங்களுக்கே வழிவகுப்பதாக அமையும்.

முஸ்லிம் கூட்டமைப்பு என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று சகல பிரதான முஸ்லிம் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒன்றாக அமையும் பட்சத்திலேயே அது சமூகத்திற்குப் பலமாகவும் வெற்றிகரமானதாகவும் அமையும். 

இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறோம்.

Comments