தந்­துரை முஸ்லிம் இளை­ஞனின் பிணை கோரிக்கை நிரா­க­ரிப்பு


முகப்­புத்­தகம் மூலம் புத்­தரை அவ­ம­தித்தார் என்ற குற்­றச்­சாட்டில் கைது­செய்­யப்­பட்ட தந்­துரை பகு­தியை சேர்ந்த இளை­ஞ­னுக்கு பிணை வழங்­கு­மாறு விடுத்த கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் எதிர்­வரும்  ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்­க­ம­றியல் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இது குறித்த வழக்கு கண்டி நீதிவான் நீதி­மன்றில் நேற்­று­முன்­தினம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே நீதிவான் குறித்த இளை­ஞ­னுக்­கான பிணை கோரிக்­கையை வழங்க மறுத்தார்.

தந்­துரை கிரா­மத்தைச் சேர்ந்த 21 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் புத்­த­பெ­ரு­மானை அவ­ம­திக்கும் வகையில் தனது முக­நூலில் கருத்­துகள் வெளி­யிட்­ட­தை­ய­டுத்து அக்­கி­ரா­மத்தில் அசம்­பா­வி­தங்கள் ஏற்­பட்­டன. பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இளை­ஞர்கள் முஸ்­லிம்­களின் 9 வீடு­களை தாக்கி சேதப்­ப­டுத்­தி­னார்கள்.

இச்­சம்­பவம் தொடர்பில் மூன்று இளை­ஞர்கள் கடு­கண்­ணாவைப் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு கண்டி நீதிவான் நீதி­மன்ற நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். புத்­தரை அவ­ம­தித்து தனது முக­நூலில் பதி­வு­களை பதி­வேற்­றிய முஸ்லிம் இளை­ஞரும் முஸ்­லிம்­களின் வீடு­களைத் தாக்கி சேதப்­ப­டுத்­திய பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இளை­ஞர்கள் இரு­வரும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

எனினும், விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட மூன்று இளை­ஞர்­களில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு இளை­ஞர்­களும் 14 நாட்­களின் பின்பு பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டனர். ஆனால் முஸ்லிம் இளை­ஞ­ருக்கு பிணை மறுக்­கப்­பட்­டது அவர் தொடர்ந்தும் பிணையில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

Comments