கூழா­மு­றிப்பில் முஸ்­லிம்­களை குடி­ய­மர்த்­து­வ­தற்கு கடும் எதிர்ப்பு


முல்­லைத்­தீவு ஒட்­டு­சுட்டான் கூழா­மு­றிப்பு பகு­தியில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருக்கும் குடி­யேற்றம், காட­ழிப்­புக்கும் எதிர்ப்புத் தெரி­வித்து நேற்­றைய தினம் முல்­லைத்­தீவில் பாரிய கண்­டன ஊர்­வலம் நடத்­தப்­பட்­டது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில்  வனப் பிர­தே­ச­மான ஒட்­டு­சுட்டான் கூழா­மு­றிப்பில் 177 ஏக்கர் வனப்­பி­ர­தேசம் அழிக்­கப்­பட்டு முஸ்லிம் 
மக்­களை குடி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் அமைச்சர் ஒரு­வ­ரினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் அதனை உட­ன­டி­யாகத் தடை செய்­ய­வேண்­டு­மெ­னவும் தெரி­வித்து குறித்த கண்­டன பேர­ணி­முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

'சட்­ட­வி­ரோத குடி­யேற்­றத்­திற்கு எதி­ரான இளைஞர்  என்ற அமைப்­பினால் நேற்று காலை 11மணி­ய­ளவில்  போராட்டம் முள்­ளி­ய­வளை காட்டா விநா­யகர் ஆலய பகு­தி­யி­லி­ருந்து ஆரம்­பித்து குடி­யேற்றம் நடை­பெ­ற­வி­ருக்கும் கூழா­மு­றிப்பு வாரி­வண்­ணாங்­காடு வரை­யான 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று  நிறை­வ­டைந்­தது.

ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்­ட­வர்கள்  "அழிக்­காதே அழிக்­காதே காடு­களை அழிக்­காதே ', கூழா­மு­றிப்பு உனக்கு இன்­னொரு வில்­பத்தா " எங்கள்  வனத்தாய் மடியில் தீ வைக்க விட­மாட்டோம் ', "முல்­லையில் வரட்சி காரணம் ரிசாத்" ,கூழா­மு­றிப்பு வீழாது "மண்ணில் துளை­யிட்­டது  வீர்கள் மட்­டு­மல்ல மாவீ­ரர்­க­ளது கன­வு­க­ளும்தான் ,நம்  பூமி  வந்­தாரை வாழவும் வைக்கும் நம் பூமி வஞ்­ச­கர்­களை வீழ்த்­தவும் நிற்கும் ,'போன்ற  கோஷங்­களை எழுப்­பி­ய­வாறும் பதா­தை­களை தாங்­கி­ய­வாறும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

போராட்­டத்தில் யாழ்ப்­பாணம் ,முல்­லைத்­தீவு ,வவு­னியா, கிளி­நொச்சி  போன்ற இடங்­க­ளி­லி­ருந்து திரண்­டு­வந்த இளை­ஞர்­களும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான துரை­ராசா, ரவி­கரன் , கஜ­தீபன் ,புவ­னேஸ்­வரன் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். 

ஆர்ப்­பாட்­டத்தில் கலந்துகொண்டு  அறிக்கை வெளி­யிட்ட இளை­ஞர்கள் அடாத்து குடி­யேற்­றத்­தையும் காட­ழிப்­பையும் நாம் எதிர்க்­கின்றோம், தமி­ழர்­களின் தாயக பகு­தி­யான வடக்கு, கிழக்கு பிர­தேசம் பாரிய அபா­யங்­களை எதிர்­நோக்­கு­கின்­றது. இந்த செயற்­பா­டு­களால் இலங்கை தீவில் தமி­ழர்­களின் இருப்பை கேள்­விக்­கு­றி­யாக்கி வரு­கின்­றது. இந்த நிலையில் தான் வடக்கில் கிழக்கில் நாடாத்­தப்­படும் அடாத்து  குடி­யேற்­றங்கள்  தமி­ழரின் இருப்­பையும் பண்­பாட்டு நிலத்­தொ­டர்­பையும் முறித்து அழிக்­கப்­ப­தையும் அது தொடர்­பான பிரச்­சி­னை­க­ளையும் நாம் தற்­போது அனு­ப­விக்க தொடங்­கி­யி­ருக்­கின்றோம்.

இந்த அபா­யத்­தி­லி­ருந்து விழிப்பு பெற்று எதிர்ப்புக் குரல் காட்­ட­வேண்­டிய சூழல் தோன்­றி­யுள்­ளது. தொடர்­ப­றாத  பண்­பாட்டு நில­மாக காணப்­பட்ட வடக்கு கிழக்கு  பிர­தேசம் தற்­போது பௌதீக ரீதியில் உடைந்து காணப்­பட இந்த திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­களே காரணம்.

கிழக்கில் எமது பண்­பாட்டு ஊர்­களை இன்று காண­மு­டி­ய­வில்லை.  வளம் நிறைந்த கிழக்கு இப்­ப­டித்தான் துண்டு துண்­டா­னது, எங்கள் பண்­பாட்டு தொடர்ச்சி முறிய முறிய நாம் பல­மிழ்க்­கின்றோம்.  இல­குவில் இலக்கு வைக்­கப்­பட்டு அர­சியல், சமூக, பொரு­ளா­தார பண்­பாட்டு துறை­க­ளி­லி­ருந்து அழித்­தொ­ழிக்கபடு­கின்றோம் . இப்­ப­டித்தான் கிழக்கும் துண்­டு­துண்­டா­னது. இப்­போது வடக்­கிலும் கண்­வைத்­து­விட்­டார்கள் .மன்­னாரில் வில்­பத்து , வவு­னி­யாவில் பம்­பை­மடு, முல்­லைத்­தீவில் குமா­ர­பு­ர­மென வன அழிப்பும் திடீர் குடி­யேற்­றங்­களும் உரு­வா­கி­யுள்­ளன.

தொன்­று­தொட்டு நாம்  வாழ்ந்த எமது பண்­பாட்டு  நிலங்­களில் புதிய குடி­யேற்­றங்­களை உரு­வாக்­கு­வதால் நாம் பின் தள்­ளப்­ப­டு­கின்றோம். மீள முடி­யாத அள­வுக்கு பாதா­ளத்­துக்கு தள்ளி விடப்­ப­டு­கின்றோம். எனவே இளை­ஞர்­க­ளாகிய நாம் விழிப்­ப­டைய வேண்டும்.  முதல் கட்­டட­மாக எங்கள்  கண்­ணீ­ராலும் செந்­நீ­ராலும் செழித்­தோங்­கிய வனத்தை அழித்து குடி­யேற்­றங்­களை உரு­வாக்கும் நாச­கார செயல்­க­ளுக்கு எதி­ராக குரல் எழுப்ப வேண்டும். முள்­ளி­ய­வளை கூழா­மு­றிப்பு பகு­தியில் வனங்­களை அழித்து  குடி­யேற்றம் மேற்­கொள்ளும் செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

எனவே இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. நாம் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்ல. அவர்­களின் குடி­யேற்­றத்­துக்கு எதி­ரா­ன­வர்­க­ளு­மல்ல. ஆனால் திட்­ட­மிட்டு வனங்­களை அழித்தும்.

எமது இனப்­ப­ரம்­பலை சிதைக்கும் வகை­யி­லான குடி­யேற்­றங்­களை எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது . 

முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்கள் நிலங்களில் வாழ நாம் என்றும் தடையானவர்கள் அல்ல. அவர்கள் நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆனால் வனங்களை அழித்து சுயலாபங்களை கருத்தில்கொண்டும்.

தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் நோக்கோடும்  வடக்கில் நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பை காட்டுவோம் என தெரிவித்தனர். 

Comments