பாணந்­துறை பள்ளி கடைகள் தாக்­குதல்

பிக்கு உட்­பட ஐவ­ருக்கு விளக்­க­ம­றியல் நீடிப்பு

பாணந்­துறை எலு­வில பள்­ளி­வாசல் மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிலை­ய­மொன்றின் மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட பிக்கு உள்­ளிட்ட ஐவ­ருக்கு இம்­மாதம் 31 ஆம் திகதி வரை விளக்­க­ம­றியல் தொடர்ந்தும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்­று­முன்­தினம் பாணந்துறை நீதிவான் நீ­தி­மன்றில் இது குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போதே குறித்த சந்­தேக நபர்­க­ளுக்கு விளக்­க­ம­றியல் நீடிக்­கப்­பட்­டது.

பாணந்துறை நகரிலும் எலுவில பகுதியிலும் இரு பள்ளிவா­சல்கள் மற்றும் இரு கடைகள் மீது கடந்த மே மாதம் நடுப்­ப­கு­தியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்­தப்­பட்­டது. இத­னை­ய­டுத்து குறித்த தாக்­கு­தலை நடத்-­தி­ய­வர்­களை வெவ்­வேறு நாட்­களில் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்-­தனர். கைதான நால்வரில் பொது­ப­ல­சேனா அமைப்புடன் இணைந்து செயற்பட்ட பெளத்த தேரர் ஒருவரும்  கொழும்பு – வாழைத்­தோட்டம் பொலிஸ் நிலை-­யத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments