இந்த நல்லாட்சி அரசாங்கம் மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு சென்றுள்ளது.

Mohamed Rizwan

என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

 இறக்காமம் மெளலானா மத்திய நிலையத்தில் இன்று சனி 08 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் மேலும் தெரிவித்ததாவது 
தற்போது நாடு எங்கயோ போய்க் கொண்டிருக்கின்றது 
முஸ்லீம் மக்களுக்கு இந்த அரசாங்கத்தில் எந்த  தீர்வும் இல்லை
 முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கவில்லை சுனாமியின் போதும் 

பேருவளை தம்புள்ள பள்ளி பிரச்சினையின் போதும் முஸ்லீம்களுக்காக நாங்கள் குரல் கொடுத்தோம் தாஜுதீன் கொலை வழக்கு மூடி மறைக்கப்படுகின்றது தற்போது அம்பாறை மாவட்ட மக்களுக்கு அரசில் வாதிகள் இருந்தும் எந்த ஒரு தீர்வும் பெறாமல் அனாதை ஆக்கப்பட்டுள்ளார்கள்

எங்கள் JVP கட்சியை ஆதரியுங்கள் எங்கள் கட்சிக்கு உங்கள் பலத்தை தாருங்கள்.
இன மத ஜாதி வேதம் பாராத ஒரே ஒரு கட்சி எங்கள்JVP கட்சிதான் ஏழை விவசாயிகளின் கஸ்டங்களை நாங்கள் நன்கு உணர்ந்தவர்கள்  மக்களுக்கென்று அரசாங்கம்  ஒன்றை நாம் அமைப்போம் மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சிக்காகவே மக்கள் அல்ல  மக்களின் தீர்ப்பே எங்கள் தீர்ப்பு ஒன்றுபடுங்கள் உரிமைகளை வெல்வோம் என JVP ன் பிரதம செயலாளர் டில்வில் சில்வா தெரிவித்தார்.

தகவல் - றிஸ்வி ஹுஸைன்

Comments