தேசிய அரசாங்கம் 2020 வரை நீடிக்கும்
மைத்திரியும் சம்மதம் என்கிறார் ரணில்
தேசிய அரசாங்கத்தை 2020 ஆம் ஆண்டுவரை கொண்டு செல்வதற்கு தானும் ஜனாதிபதியும் இணங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் கடன் சுமையை தீர்ப்பதற்கு தேசிய அரசாங்கத்தை தவிர மாற்று வழி கிடையாது. அடுத்த தலைமுறையினருக்கு கடன் சுமையை விட்டுச் செல்ல மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிரிந்திவெல பஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில், தற்போது தேசிய அரசாங்கம் கவிழப் போவதாகக் கூறுகின்றனர். எனினும் தேசிய அரசாங்கம் கவிழந்து விடும் என்று கூறிக் கூறியே இருவருடம் நிறைவடைந்து விட்டது. இனிமேல் இருப்பது மூன்று வருடங்கள் மாத்திரமேயாகும். ஆகவே அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்று கூறி அடுத்த மூன்று வருடங்களும் சென்று விடும். எனவே தேசிய அரசாங்கம் அடுத்து மூன்று வருடம் வரை பயணிக்கும்.
நாம் நாட்டை பொறுப்பேற்கும் போது பாரிய பிரச்சினைகள் காணப்பட்டன. குறிப்பாக கடன் சுமை அதிகளவில் இருந்தது. ஆகவே கடன் சுமையை தீர்ப்பதே எமது நோக்கமாகும். கடன் சுமை அதிகரித்து தீர்க்க முடியாமல் போய் விடும் என்ற அச்சத்தின் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உடனே தேர்தலுக்கு சென்றார். ஜனாதிபதி தேர்தலை இரு வருடத்திற்கு முன்னர் வைப்பதற்கு பிரதான காரணம் இதுவாகும்.
ஆகவே, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் கடன் சுமையை தீர்க்க முற்பட்டோம். தேசிய அரசாங்கத்தினாலும் கடன் சுமையை தீர்க்க முடியாது என்றே முன்னைய ஆட்சியாளர் நம்பினர். எனினும் நாம் அதற்கு மாற்றமாக கடன்சுமையை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். கடன் சுமையை தீர்ப்பதற்கு தேசிய அரசாங்கத்தை தவிர மாற்று வழி கிடையாது. இதன்காரணமாக இரு பிரதான கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை ஆரம்பித்தோம்.
இந்நிலையில் இரு வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இனி மூன்று வருடங்களே எஞ்சியுள்ளன. தேசிய அரசாங்கத்தை ஐந்து வருடத்திற்கு கொண்டு செல்வதற்கு நானும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பூரணமாக இணங்கியுள்ளோம் என்றார்.
தேசிய அரசாங்கத்தை 2020 ஆம் ஆண்டுவரை கொண்டு செல்வதற்கு தானும் ஜனாதிபதியும் இணங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் கடன் சுமையை தீர்ப்பதற்கு தேசிய அரசாங்கத்தை தவிர மாற்று வழி கிடையாது. அடுத்த தலைமுறையினருக்கு கடன் சுமையை விட்டுச் செல்ல மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிரிந்திவெல பஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில், தற்போது தேசிய அரசாங்கம் கவிழப் போவதாகக் கூறுகின்றனர். எனினும் தேசிய அரசாங்கம் கவிழந்து விடும் என்று கூறிக் கூறியே இருவருடம் நிறைவடைந்து விட்டது. இனிமேல் இருப்பது மூன்று வருடங்கள் மாத்திரமேயாகும். ஆகவே அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்று கூறி அடுத்த மூன்று வருடங்களும் சென்று விடும். எனவே தேசிய அரசாங்கம் அடுத்து மூன்று வருடம் வரை பயணிக்கும்.
நாம் நாட்டை பொறுப்பேற்கும் போது பாரிய பிரச்சினைகள் காணப்பட்டன. குறிப்பாக கடன் சுமை அதிகளவில் இருந்தது. ஆகவே கடன் சுமையை தீர்ப்பதே எமது நோக்கமாகும். கடன் சுமை அதிகரித்து தீர்க்க முடியாமல் போய் விடும் என்ற அச்சத்தின் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உடனே தேர்தலுக்கு சென்றார். ஜனாதிபதி தேர்தலை இரு வருடத்திற்கு முன்னர் வைப்பதற்கு பிரதான காரணம் இதுவாகும்.
ஆகவே, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் கடன் சுமையை தீர்க்க முற்பட்டோம். தேசிய அரசாங்கத்தினாலும் கடன் சுமையை தீர்க்க முடியாது என்றே முன்னைய ஆட்சியாளர் நம்பினர். எனினும் நாம் அதற்கு மாற்றமாக கடன்சுமையை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். கடன் சுமையை தீர்ப்பதற்கு தேசிய அரசாங்கத்தை தவிர மாற்று வழி கிடையாது. இதன்காரணமாக இரு பிரதான கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை ஆரம்பித்தோம்.
இந்நிலையில் இரு வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இனி மூன்று வருடங்களே எஞ்சியுள்ளன. தேசிய அரசாங்கத்தை ஐந்து வருடத்திற்கு கொண்டு செல்வதற்கு நானும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பூரணமாக இணங்கியுள்ளோம் என்றார்.


Comments
Post a Comment