குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில 21 மில்லியன் ரூபா செலவில் கார்பெட் வீதி


திருகோணமலை மாவட்ட குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜாயா நகர் பிரதேசத்தில் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் 21 மில்லியன் ரூபா செலவில் கார்பெட் வீதி அமைக்கும் வேலைகள் (18)வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை மாவட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் கிழக்கு மாகாண உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர்.மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர்,முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் மொஹமட் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள் இப் பிரதேச பொதுமக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களால் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் மற்றும் அதிதிகளுக்கு பெருவரவேற்பும் வழங்கினார்கள்.

Comments