முஸ்லிம் பாடசாலை விடுமுறை மாற்றத்தினால் பிற மத ஆசிரியர்கள் பாதிப்பு

கல்வி அமைச்சில் முறைப்பாடு

முஸ்லிம் பாட­சா­லை­களில் இரண்டாம் தவ­ணைக்­கான விடு­முறை தினம் மாற்­றப்­பட்­டுள்­ளதால் முஸ்லிம் பாட­சா­லை­களில் கட­மை­யாற்றும் சிங்­கள ஆசி­ரிய, ஆசி­ரி­யை­க­ளுக்கு அநீதி நிகழ்ந்­தி­ருப்­ப­தாக கல்வி அமைச்­ச­ருக்கும் அதன் செய­லா­ள­ருக்கும் பாதிப்­புக்­குள்­ளான ஆசி­ரி­யர்­களால் எழுத்து மூல­மான முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

குறித்த முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது; முஸ்லிம் பாட­சா­லை­களில் இரண்டாம் தவணை விடு­முறை ஆரம்­ப­மாகும் தினம் இம்­மாதம் 18 ஆம் திக­தி­யாகும். ஆனால் கல்­வி­ய­மைச்சு திடீ­ரென 17 ஆம் திகதி அரச வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் ஏற்­க­னவே குறித்­தி­ருந்த தினத்தை இரத்துச் செய்து செப்­டெம்பர் முதலாம் திக­தி­யி­லி­ருந்து விடு­முறை ஆரம்­பிப்­ப­தாக அறி­வித்­தி­ருந்­தது.

சமய அமைப்­பொன்றின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்­கவே மேற்­படி மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எனவே இவ்­வாறு விடு­முறை தினங்கள் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வதால் தம்மை சிங்­களப் பாட­சா­லை­க­ளுக்கு மாற்றஞ் செய்து தரும்­ப­டியும் முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்­ளனர்.

முஸ்லிம் பாட­சா­லை­களில் கற்­பிக்கும் சிங்­கள ஆசி­ரி­யர்கள் கையொப்­ப­மிட்டு அனுப்­பி­யுள்ள முறைப்­பாட்டு அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கையில்; 

சிங்­களப் பாட­சா­லை­களில் படிக்கும் தம் பிள்­ளைகள் விடு­மு­றையில் இருக்­கையில் அவர்­க­ளுடன் விடு­மு­றையைக் கழிக்க முடி­யா­துள்­ளது. அத்­துடன் ஏற்­க­னவே திட்­ட­மிட்­டி­ருந்­த­வாறு, பய­ணங்கள், வைப­வங்­களில் கலந்­து­கொள்ள முடி­யா­த­வாறு தமக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் க.பொ.த. உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்றும் தம் பிள்­ளை­களின் பரீட்சை தொடர்பான வேலைகளைச் செய்வதிலும் தாம் வாய்ப்பை இழக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் முறைப்பாட்டுக் கடிதத்தில் காரணங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

Comments