மியன்மார் அகதிகளுக்கு வேறொரு நாட்டில் புகலிடம்
யு.என்.எச்.சி.ஆர் நடவடிக்கை
இலங்கையில் மிரிஹான பொலிஸ் நிலைய விசேட தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கு வேறோர் நாட்டில் புகலிடம் பெற்றுக் கொடுக்க யு.என்.எச்.சி.ஆர். நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதுவரை அகதிகளுக்கு யு.என்.எச்.சி.ஆர். நிறுவனம் உணவு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
இதேவேளை மிரிஹான விசேட தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை அம் முகாமிலிருந்தும் அகற்றி வேறோர் இடத்தில் கல்கிசையில் தங்க வைப்பதற்கு ஐ.நா. யு.என்.எச்.சி.ஆர். நிறுவனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகரிகள் யு.என்.எச்.சி.ஆர். நிறுவன அதிகாரிகள், ஆர்.ஆர்.ரி அமைப்பின் சட்டத்தரணிகள் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்து அமைச்சர் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
மியன்மார் ரோஹிங்யா அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமிலிருந்து வேறோர் இடத்துக்கு இடம் மாற்றுவதற்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் நீதிமன்றின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்ததையடுத்து மியன்மார் அகதிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி காங்கேசன்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்றின் அங்கீகாரம் பெறப்படவுள்ளது என ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு மியன்மார் ரோஹிங்யா அகதிகள் மேற்கொண்ட பயணத்தின்போது படகு கோளாறுக்குள்ளானதையடுத்து கடலில் தத்தளித்த நிலையில் அவர்கள் வடக்கு கடல் எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். பின்பு அவர்கள் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ் அகதிகளில் 7 ஆண்கள், 7 பெண்கள், 16 பிள்ளைகள் என 30 பேர் அடங்குகின்றனர்.
இவ் அகதிகளின் இளம் பெண் ஒருவர் மிரிஹான பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவரினால் பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டு அடையாள அணி வகுப்பின்போது பாதிக்கப்பட்ட பெண்ணினால் இனங்காணப்பட்டார்.
இலங்கையில் மிரிஹான பொலிஸ் நிலைய விசேட தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கு வேறோர் நாட்டில் புகலிடம் பெற்றுக் கொடுக்க யு.என்.எச்.சி.ஆர். நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதுவரை அகதிகளுக்கு யு.என்.எச்.சி.ஆர். நிறுவனம் உணவு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
இதேவேளை மிரிஹான விசேட தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை அம் முகாமிலிருந்தும் அகற்றி வேறோர் இடத்தில் கல்கிசையில் தங்க வைப்பதற்கு ஐ.நா. யு.என்.எச்.சி.ஆர். நிறுவனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகரிகள் யு.என்.எச்.சி.ஆர். நிறுவன அதிகாரிகள், ஆர்.ஆர்.ரி அமைப்பின் சட்டத்தரணிகள் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்து அமைச்சர் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
மியன்மார் ரோஹிங்யா அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமிலிருந்து வேறோர் இடத்துக்கு இடம் மாற்றுவதற்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் நீதிமன்றின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்ததையடுத்து மியன்மார் அகதிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி காங்கேசன்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்றின் அங்கீகாரம் பெறப்படவுள்ளது என ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு மியன்மார் ரோஹிங்யா அகதிகள் மேற்கொண்ட பயணத்தின்போது படகு கோளாறுக்குள்ளானதையடுத்து கடலில் தத்தளித்த நிலையில் அவர்கள் வடக்கு கடல் எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். பின்பு அவர்கள் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ் அகதிகளில் 7 ஆண்கள், 7 பெண்கள், 16 பிள்ளைகள் என 30 பேர் அடங்குகின்றனர்.
இவ் அகதிகளின் இளம் பெண் ஒருவர் மிரிஹான பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவரினால் பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டு அடையாள அணி வகுப்பின்போது பாதிக்கப்பட்ட பெண்ணினால் இனங்காணப்பட்டார்.


Comments
Post a Comment