அளுத்கம நஷ்டயீடும் நீதிக்கான போராட்டமும்


அளுத்­கம வன்­மு­றை­களில் உயி­ரி­ழந்த மற்றும் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­துள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

மர­ண­ம­டைந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு தலா 20 இலட்சம் ரூபாவும் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும் வழங்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கூடிய அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

அளுத்­கம வன்­முறைச் சம்­ப­வங்கள் நடந்து மூன்று வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலை­யி­லேயே இந்த நஷ்­ட­யீடு வழங்கும் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை மீள்­கு­டி­யேற்ற புனர்­வாழ்வு இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் பல்­வேறு வழி­களில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். 

இவ்­வ­ருடம் மார்ச் மாதத்­துடன் அளுத்­கம வன்­மு­றைகள் நடந்து 1000 நாட்கள் கடந்தும் துப்­பாக்கிச் சூட்டு சூத்­தி­ர­தா­ரிகள் எவரும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­டா­மையை கண்­டித்து ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்­தீனை மேற்­கோள்­காட்டி மார்ச் 10 ஆம் திகதிய 'விடி­வெள்ளி' தலைப்புச் செய்­தி­யொன்றை வெளி­யிட்­டி­ருந்­தது. குறித்த செய்­தியை காண்பித்து இது தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் உரை நிகழ்த்­திய இரா­ஜாங்க அமைச்சர்  ஹிஸ்­புல்லாஹ், நீதி நிலை­நாட்­டப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

அதனைத் தொடர்ந்து சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மற்றும் மீள்­கு­டி­யேற்ற புனர்­வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் மூல­மாக  மர­ண­ம­டைந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு தலா 20 இலட்சம் ரூபாவும், காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும்  நஷ்­ட­யீடு வழங்­கு­மாறு வலி­யு­றுத்தும் அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்றை கடந்த ஜூலை 24 ஆம் திகதி தாக்கல் செய்ய ஹிஸ்புல்லாஹ் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார். இந் நிலை­யி­லேயே மேற்­படி அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­திற்கு கடந்த வாரம் அனு­மதி கிடைத்­துள்­ளது.

குறித்த அமைச்­ச­ரவைப் பத்­திரம் அமைச்­ச­ர­வையில் பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட சமயம் சில பெரும்­பான்மை அமைச்­சர்கள் நஷ்­ட­யீட்டுத் தொகையை குறைக்­கு­மாறு கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். இந் நிலையில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதி­யுதீன், ராஜித சேன­ரத்ன, தயா­சிறி ஜய­சே­கர, அநுர பிர­ய­தர்­ஷன யாப்பா போன்றோர் குறிப்­பி­டப்­பட்­டுள்ள முழுத் தொகையும் வழங்­கப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர். அந்த வகையில் இது விட­யத்தில் செயற்­பட்ட, ஆத­ரித்து வாதா­டிய அனைத்து அர­சி­யல்­வா­திகள், சிவில் சமூக பிர­மு­கர்கள் அனை­வரும் பாராட்­டுக்­கு­ரி­ய­வர்கள்.

எனினும் இந்த நஷ்­ட­யீட்டுத் தொகை வழங்­கப்­ப­டு­வதன் மூலம் மாத்­திரம் அளுத்­கம விட­யத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­பட்டு விட்­ட­தாக எம்மால் முடி­வுக்கு வர முடி­யாது. தமது சொத்­துக்­களை முற்­றாக இழந்த, வியா­பா­ரத்தை இழந்த, கல்வி உள்­ளிட்ட எதிர்­கா­லத்தை இழந்த சக­ல­ருக்கும் அர­சாங்கம் என்ன நஷ்­ட­யீட்டை வழங்கப் போகி­றது என்­பதும் இங்கு எழும் கேள்­வி­யாகும்.
அதற்­கப்பால் இந்த சம்­ப­வங்­களின் சூத்­தி­ர­தா­ரி­களைக் கண்­ட­றிந்து சட்­டத்தின் முன் நிறுத்­து­கின்ற விட­யத்தில் இந்த நல்­லாட்சி அர­சாங்­கமும் தோல்­வி­யையே கண்­டுள்­ளது. 

அளுத்­கம சம்­பவம்  தொடர்­பான வழக்­குகள் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக தொடர்­கின்ற போதிலும் இது­வரை நியா­ய­மான தீர்ப்­புகள் கிடைக்கப் பெற­வில்லை. குறிப்­பாக இரு­வரைப் பலி­யெ­டுத்து பலரை காயப்­ப­டுத்­திய துப்­பாக்கிச் சூட்டுச் சம்­பவம் தொடர்­பான வழக்கும் இழுத்­த­டிக்­கப்­பட்டே வரு­கி­றது. குற்­ற­வா­ளிகள் சுதந்­தி­ர­மாக நட­மாடித் திரி­கின்­றனர்.

எனவேதான் அளுத்கம மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதில் அரசியல், கட்சி, கொள்கை பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட வேண்டும். நாம் போராடாத வரை, முயற்சிக்காத வரை நமக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப் போவதில்லை என்பதை கவனத்தில் கொள்வோமாக.

Comments