தேசிய வருமான வரி சட்டமூல வரைவு குறித்த உயர் நீதிமன்றத்தின் முடிவு


திருத்தம் செய்யப்பட்ட புதிய தேசிய வருமான வரி சட்டமூல வரைவின் சில பந்திகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏதுவானதாக இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் இன்று காலை உயர் நீதிமன்றத்தின் முடிவு குறித்து அறிவித்துள்ளார்.

இதனால், இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் விசேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அப்படியில்லை எனில் பந்திகளை திருத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Comments