பைசல் நகர் சனூதா பாலர் பாடசாலையில் டெங்கு பரவுவதை தடுப்பதற்கான நிகழ்வு

ihzana Fareed

கிழக்கு மாகாண சபையின் பாலர் பாடசாலை பணியகத்தின் EP/ PSEP
GEN/ DENGUE /2017 ஆம் இலக்க கடிதத்தின் பிரகாரம் டெங்கு பரவுவதை தடுப்பதற்கான செயற்றிட்டத்தின் கீழ் பைசல் நகர் சனூதா பாலர் பாடசாலையில் இன்று (01) செவ்வாய் கிழமை இரண்டு வகையான நிகழ்வுகள் இடம்பெற்றது.

பாலர் பாடசாலையின் உட்புறம் மற்றும்  வெளிப்புறச் சூழல் டெங்கு பரவுவதை தடுப்பதற்கு சுத்தம் செய்தல், 
மற்றது பெற்றோர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் என்பன இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஆசிரியைகளான திருமதி , இபாதுள்ளா, செல்வி, றஹிமா பர்லின், மற்றும் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் பங்கு கொண்டனர்

Comments