துஸ்பிரயோகத்துக்குட்படுத்த முற்பட்ட நபர் விளக்கமறியல்
திருகோணமலை - ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை, துஸ்பிரயோகத்துக்குட்படுத்த முற்பட்ட நபர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று (26) உத்தரவிட்டார்.
கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை வீட்டுக்குச் சென்று துஸ்பிரயோகத்துக்குட்படுத்த முற்பட்டதாக, சிறுமியின் பெற்றோரால் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, அவரை நேற்று (25) கைதுசெய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் மனைவி வெளிநாடு சென்று சென்றுள்ளதாகவும், சந்தேக நபர் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்ததாகவும் வழசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.


Comments
Post a Comment