ரோஹிங்ய அகதிகளை வெளியேற்றக்கோரி பிக்குகள் அட்டகாசம்


கல்­கிசை பொலிஸ் பிரிவில் ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ், மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்ய முஸ்லிம் அக­தி­களை அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் நேற்று அவ்­வீட்டை சுற்­றி­வ­ளைத்து ஆர்ப்­பாட்டம் செய்­தனர். 
இதனால் அப்­ப­குதி எங்கும் பெரும் அச்ச சூழ்­நிலை உரு­வா­ன­துடன்  ரோஹிங்ய முஸ்லிம் அக­தி­களின் பாது­காப்பை உறுதி செய்ய பொலிஸார் அக­தி­களை தமது பொறுப்பில் எடுத்­தனர்.  

இந் நிலையில்  ரோஹிங்ய முஸ்லிம் அக­தி­களின் பாது­காப்பை உறு­தி­செய்ய அவர்­களை பொலிஸ் பொறுப்பில் எடுத்து பொலிஸ் நிலை­யத்தில் வைத்­துள்­ள­னர். இதனிடையே,  நேற்­றைய இந்த சம்­பவம் தொடர்பில் கல்­கிசை நீதி­வா­னுக்கு அறிக்கை சமர்ப்­பித்­துள்­ள­தா­கவும் சம்­பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும்  பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

நேற்றுக் காலையும், மாலையும் குறித்த வீட்டை தேரர்கள் தலை­மை­யி­லான குழு­வினர் சுற்­றி­வ­ளைத்து கலகம் விளை­விக்கும் வண்ணம் நடந்­து­கொண்ட நிலையில் ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டனர். இதனால் கல்­கிசை - இரத்­ம­லானை வீதியில் அதிக  வாகன நெரி­சலும் ஏற்­பட்­ட­துடன் பிர­தே­சத்தில் பதற்­றமும் அதி­க­ரித்­தது.

ஐக்­கிய நாடுகள் சபையின் அக­திகள் தொடர்­பான ஆணை­ய­கத்தின் பாது­காப்­பி­லேயே இவர்கள் இங்கு தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்று குறித்த விடு­தியின் பொறுப்­பாளர் எடுத்துக் கூறிய போதிலும் பிக்­குகள் அதனை மறுத்து இவர்கள் சட்­ட­வி­ரோ­த­மா­கவே தங்க வைக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்று கடும் தொனியில் தம் எதிர்ப்பை வெளி­யிட்­டனர். 

இந் நிலையில் ஸ்தலத்­துக்கு உட­ன­டி­யாக கல்­கிசை பொலிஸார் அழைக்­கப்­பட்டு நிலை­மை­மையைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

இச் சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நேற்றுக் காலை 10.15 மணி­ய­ளவில் பிக்­குகள் தலை­மை­யி­லான குழுவினர் குறித்த ரோஹிங்ய முஸ்­லிம்கள் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்த வீட்­டுக்கு வந்­து, வீட்டின் முன்­பாக, அவர்­களை வெளி­யேற்­று­மாறு கோரி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். இதன்­போது,  அவர்கள் வீட்­டுக்குள் நுழை­யவும் முற்­பட்ட நிலையில் ஸ்தலத்­துக்கு கல்­கிசை பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து அப்­போதும் பாட­சா­லைக்கு சென்­றி­ருந்த அகதிச் சிறு­வர்கள் ஓரி­ருவர் தவிர ஏனை­யோரை பொலிஸ் ட்ரக் வண்டி ஊடாக கல்­கிசை பொலிஸ் நிலை­யத்­துக்கு பொலிஸார் அழைத்து சென்­றனர். அக­தி­களின் பாது­காப்பை உறுதி செய்ய இவ்­வாறு அவர்­களை பொலிஸார் பொறுப்­பேற்­ற­தாக கல்­கிசை பிராந்­திய பொலிஸ் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். இந் நிலையில் பாட­சா­லையில் இருந்த சிறு­வர்­களும் பின்னர் பாது­காப்பு கருதி பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ளனர். 

அதன்­பின்னர் நிலை­மையை ஆராய்ந்த பொலிஸார் அக­தி­களை மீளவும் அவர்கள் வசித்த வீட்டில் பிற்­பகல் வேளையில் மீள குடி­ய­மர்த்­தினர்.

 எனினும் மீளவும் மாலை 5.30 மணி­ய­ளவில் அப்­ப­கு­தியில் கூடிய சுமார் 70 பேர் வரை­யி­லான பிக்­குகள் உள்­ளிட்ட கடும்­போக்கு பெரும்­பான்மை இனத்­த­வர்கள் கல­கத்தை ஏற்­ப­டுத்தும் வண்ணம் அங்கு குழு­மி­ய­துடன் குறித்த வீட்­டினுள் அத்­து­மீற முயற்­சித்­துள்­ள­துடன் வீட்டின் மீது கல் வீசித் தாக்­கு­தலும் நடத்­தி­யுள்­ளனர்.  இதன்­போது இரு பொலி­ஸா­ருக்கு சிறு காயங்கள் ஏற்­பட்­டன. இதனால் மாலை வேளையில் மீளவும் அக­தி­களை பாது­காக்க பொலிஸார் கடும் பிர­யத்­த­னத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 
இதற்கு மேல­தி­க­மாக அவர்கள் பிர­தான பாதையில் வாகன போக்­கு­வ­ரத்­துக்கு தடை ஏற்­படும் வண்­ணமும் ஆர்ப்­பாட்டம் செய்­தனர். 
 இந் நிலையில், நிலைமை மோச­ம­டை­வதை உணர்ந்த பொலிஸார் ரோஹிங்ய அக­தி­களை தமது பொறுப்பில் எடுத்து, ட்ரக் வண்­டியில் மீண்டும் பொலிஸ் பாது­காப்­புடன் கல்­கிசை பொலிஸ் நிலையம் அழைத்து சென்­றனர்.

 இந் நிலையில் நேற்று இரவு முழு­வதும் அந்த அக­திகள் பொலிஸ் பாது­காப்பின் கீழ் கல்­கிசை பொலிஸ் நிலை­யத்தில் தங்­க­வைக்­க ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் இவர்­களை மீண்டும் பாது­காப்­பான இட­மொன்றில் தங்­க­வைப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ள­தாக பொலிசார் தெரி­வித்­தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி 30 ரோஹிங்ய முஸ்­லிம்கள் காங்­கே­சன்­துறை கடற்­ப­ரப்பில் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருந்த நிலையில்  கடற்­ப­டை­யி­னரால் காப்­பாற்­றப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் குறித்த ரோஹிங்ய முஸ்­லிம்கள் மல்­லாகம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து அவர்­களை மிரி­ஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அதன் பின்­ன­ரான வழக்கு விசா­ர­ணை­களின் போது, ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ரகம் (யு.என்.எச்.ஆர்.சி) , குறித்த ரோஹிங்ய முஸ்­லிம்­களை பொறுப்­பேற்­றது. மல்­லாகம் நீதிவான் நீதி­மன்றில், ஐ.நா. அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ரகம் சார்பில் அவர்­களை வேறு நாடொன்றில் அக­தி­க­ளாக குடி­யேற்றும் வரை மிரி­ஹான தடுப்பு முகா­முக்கு வெளியே வைத்து பரா­ம­ரிக்க அனு­மதி பெறப்­பட்­டி­ருந்­தது. 

 இத­னை­ய­டுத்து முஸ்லிம் எயிட் என்ற அரச சார்­பற்ற நிறு­வ­னத்தின் அனு­ச­ர­ணையில் குறித்த 30 பேரும் இரத்­ம­லானை பகு­தியில் மூன்று மாடி வீடொன்று பெறப்­பட்டு அங்கு தங்­க­வைக்­கப்­பட்டு பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். இந்த 30 பேரில் இலங்­கைக்கு வந்த பின்னர் புதி­தாக ஒரு குழந்தை பிறந்­துள்ள நிலையில் தற்­போது மொத்­த­மாக 31 பேர் அங்கு தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவர்­களில்  7 பெண்­களும் 16 சிறு­வர்­களும் அடங்­குவர். சிறார்­களில் சிலர் பிர­தே­சத்தின் பாட­சாலை ஒன்­றிலும் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது.

இந் நிலையில் மியன்­மாரில் இருந்து தீவி­ர­வா­திகள், அக­திகள் எனும் பேரில் நாட்­டுக்குள் வந்­துள்­ள­தா­கவும் அவர்கள் சட்ட விரோ­த­மாக தங்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்தே கல்­கிசை பகு­தியில் உள்ள குறித்த மூன்று மாடி வீடு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வி­னரால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டது.

எனினும் அங்கு தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்கள் அகதி அந்­தஸ்து கோரிய ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ் இருந்­துள்­ளமை பொலிஸார் ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

 இந் நிலையில் அவர்­களின் பாது­காப்பை  பொலிஸார் உறுதி செய்ய நட­வ­டிக்கை முன்­னெ­டுத்­துள்­ளனர்.
 இது தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் அக­தி­க­ளுக்­கான  மனி­தா­பி­மான முக­வ­ரகம் அர­சாங்­கத்­துடன் பேச்­சுக்­களை நடாத்­த­வுள்­ள­துடன், இந்த பிக்­கு­களின் நட­வ­டிக்கை தொடர்பில் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இதன்­போது பிக்­குகள் குழு­வுக்கு தலைமை தாங்­கிய அக்­மீ­மன தாய­ரத்ன தேரர் கூறு­கையில், “இந்த மியன்மார் கைதிகள் உட­ன­டி­யாக நாடு கடத்த வேண்டும். இவர்கள் ரோஹிங்ய முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள். இவர்­களைத் தவிர மேலும் பெருந்­தோ­கை­யாக அடிப்­ப­டை­வா­திகள் இங்கு கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அது குறித்த காணொலிக் காட்­சிகள் அடங்­கிய பதி­வுகள் முகநூல், சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­கி­யுள்­ளன. இவர்­களை இலங்­கைக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­காக அர­சாங்­கத்தின் மூலம் ஒழுங்­குகள் செய்து கொடுக்­கப்­பட்­ட­தா­கவும் அறி­கிறேன்” என்று கூறி­யுள்ளார். 

எனினும் இவ­ரது குற்­றச்­சாட்டை  இலங்கை கடற்­படை பேச்­சாளர் கொமாண்டர் லங்­கா­னாத்த திஸா­நா­யக்க மறுத்­துள்ளார்.  இது குறித்து அவர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கையில், இறு­தி­யாக கடந்த ஏப்ரல் 30 ஆம் திக­தியே 30 பேர் அடங்­கிய ரோஹிங்ய அக­தி­களை கடற்­ப­டை­யினர் பெறுப்­பேற்­றனர். பொது­வாக இலங்­கையின் கடல் எல்­லைக்குள் சட்­ட­பூர்­வ­மற்ற முறையில் பிர­வே­சிக்கும் எவ­ரையும் கடற்­படை கண்­கா­ணித்து வரு­கி­றது. எவரும் பிர­வே­சிக்­கா­த­வாறு கடற்­ப­டை­யினர் அமர்த்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்றார்.

இதே­வேளை இந்த அக­திகள் விவ­கா­ரத்தில் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை கையாண்டு வரும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் விடிவெ ள்ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், இந்த அக­திகள் யு.என்.எச்.ஆர்.சி. இன் அனு­ச­ர­ணை­யுடன் பொலிசாருக்கு முறையாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டே கல்கிசை பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். அனைத்து நடவடிக்கைகளும் நீதிமன்ற உத்தரவிற்கிணங்க சட்டபூர்மவாகவே முன்னெடுக்கப்பட்டன. இந் நிலையில் இதனை எவராலும் எதிர்க்க முடியாது.  இவர்களில் 16 சிறுவர்களும் 7 பெண்களும் இருக்கிறார்கள். இந்த அகதிகளைப் பாதுகாப்பது பொலிசாரின் கடமையாகும். இந்த அகதிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாம் விரைவில் முன்னெடுக்கவுள்ளோம்'' என்றார்.

மியன்மாரில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் தொடர்ந்த வன்முறைகள் காரணமாக இலட்சக் கணக்கான அகதிகள் பங்களாதேஷுக்கு சென்றுள்ளனர். எனினும் இவர்களில் கணிசமானோர் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக கூறி கடும்போக்கு பௌத்த பிக்குகள் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திக் கிடைத்த தகவலுக்கமைய குறித்த அகதிகளின் பாதுகாப்புக் கருதி அவர்களை பொலிஸார் பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Comments