கண்டி சித்திலெப்பை மகா வித்தியாலயம் தொடர்பில் கலந்துரையாடல்
கண்டி சித்திலெப்பை மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று (10) கட்சியின் கண்டி அலுவலகத்தில் சந்தித்து, பாடசாலையின் பௌதீக வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இப்பாடசாலை மாகாணசபை நிர்வாகத்தின் கீழ் வருவதால், எதிர்வரும் 14ஆம் திகதி பாடசாலை அபிவிருத்திக்குழுவுடன் மாகாணசபை முதலமைச்சரை சந்தித்து இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது உறுதியளித்தார்.


Comments
Post a Comment