கருத்து வேறுபாடுகள் தொடர்வதால் தனியார் சட்டம் தாமதம்
முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கான சிபாரிசு அறிக்கை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளில் இன்னும் கருத்து வேறுபாடுகள் தொடர்வதே காரணம் என உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் 17 ஆம் திகதி கட்டாய கூட்டமொன்று இடம்பெறவிருக்கிறது. இதில் இறுதித் தீர்மானமெடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு சிபாரிசுகளை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் விடிவெள்ளிக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கான சிபாரிசு அறிக்கை பூர்த்தி செய்யும் பணிகள் தீவிரமாகவே இடம்பெற்று வருகின்றன. எனினும், பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளை உள்ளீர்ப்பதில் குழு உறுப்பினர்களிடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. இதனால், சில தாமதங்கள் ஏற்படுகின்றன. எனினும் நீண்டு நாட்களுக்கு இதனை தொடர முடியாது.
எனினும், இது முஸ்லிம் சமூகத்தின் உரிமையை நீண்ட காலத்திற்கு பேணும் வகையில் அறிக்கையிடப்படவேண்டியிருப்பதால் அவசரமாக முடிவெடுத்துவிட இயலாது.
இந்நிலையிலேயே, எதிர்வரும் 17 ஆம் திகதி கட்டாயக் கூட்டமொன்று நடத்தவிருக்கிறோம். இதில் குறித்த சிபாரிசு அறிக்கையை இறுதி செய்து, உறுப்பினர்களிடையே கையொப்பம் பெறவிருக்கிறோம் என்றார்.


Comments
Post a Comment