மோசடியில் ஈடுபட்ட மாணவனுக்கு 4 ஆம் திகதி பரீட்சை எழுத அனுமதி
க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரசாயனவியல் வினாப் பத்திர மோசடியில் ஈடுபட்ட மாணவருக்கு வாழ்நாள் முழுவதும் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் எந்தவொரு பரீட்சைக்கும் தோற்ற முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், சந்தேக நபருடைய சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கினங்க, எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள உயர் தரப் பரீட்சையின் எஞ்சிய பாடத்தை மஹர சிறைச்சாலையில் வைத்து எழுதுவதற்கு கம்பஹா மஜிஸ்ட்ரேட் நீதிபதி டீ.ஏ. ருவன் பதிரண அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


Comments
Post a Comment