தாக்­கி­யதை அர­சாங்கம் நிரூ­பித்துக் காட்­டட்டும்

அக்­மீ­மன தயா­ரட்ன தேரர் சவால்

ரோஹிங்­கிய அக­தி­களை நாங்கள் தாக்­க­வில்லை. முடி­யு­மானால் அர­சாங்கம் நிரூ­பிக்­கட்டும் என சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் சவால் விடுத்­துள்ளார்.
சிங்­கள ராவய அமைப்பு நேற்று நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,
கல்­கிசை பிர­தே­சத்தில் ரோஹிங்­கிய முஸ்­லிம்கள் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக எமக்கு தகவல் கிடைத்­தது. அதன் பிர­காரம் நாங்கள் அங்கு சென்று கல்­கிசை பொலிஸில் இது தொடர்­பாக வின­வினோம். ஆனால், பொலிஸார் இது தொடர்­பாக எதுவும் தெரி­யாது என எங்­க­ளிடம் தெரி­வித்­தனர். அதன் பின்­னர்தான் நாங்கள் அவர்கள் இருக்கும் இடத்தை கண்­ட­றிந்து அவர்­களை அந்த இடத்தில் இருந்து வெளி­யேற்­று­மாறு தெரி­வித்தோம்.
அத்­துடன், இவர்கள் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் அக­திகள் தங்­க­வைக்­கப்­படும் முகாமில் அவர்­களின் கட்­டுப்­பாட்டில் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அப்­ப­டி­யானால் அவர்கள் அக­திகள் முகாமில் தங்­க­வைக்­கப்­ப­ட­வேண்டும். அவர்­க­ளுக்கு பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­ப­ட­வேண்டும். அந்த இடத்தில் ஐக்­கிய நாடு­களின் கொடி தொங்­க­வி­டப்­ப­ட­ வேண்டும். அவ்­வாறு எதுவும் இங்கு இடம்­பெ­ற­வில்லை.
மாறாக ரோஹிங்­கிய  அக­திகள் கல்­கிசை பகு­தியில் சொகுசு மாடி வீட்டில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களின் பிள்­ளைகள் பிர­பல பாட­சா­லை­களில் சேர்க்­கப்­பட்­டுள்­ளனர். எமது பிள்­ளை­களை அந்த பாட­சா­லை­களில் சேர்த்­துக்­கொள்­வ­தென்றால் அதற்கு பல நிபந்­த­னை­களை விதிப்­பார்கள். அத்­துடன் இவர்கள் இருப்­பது பொலி­ஸாருக்கு தெரி­யாமல் இருப்­பது பெரும் தவ­றாகும்.
மேலும், அமைச்­சர்­க­ளான ராஜித, மங்­கள போன்­ற­வர்கள் தெரி­விப்­ப­து­போன்று நாங்கள் அந்த மக்­களை தாக்­கு­வ­தற்கு செல்­ல­வில்லை. அவர்­களை அந்த இடத்தில் இருந்து அகற்­று­மாறு தெரி­வித்தே எமது மக்கள் ஆர்ப்­பாட்டம் செய்­தனர் என்­றாலும் மாலை வரை பொலிஸார் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கா­த­தால்தான் மக்கள் குழப்­ப­ம­டைந்து செயற்­பட்­டனர். அவ்­வாறு நாங்கள் அவர்­களை தாக்­கி­யதை அர­சாங்கம் முடி­யு­மானால் ஒப்­பு­வித்து காட்­டட்டும்.
மேலும், ரோஹிங்­கிய  இனத்­த­வர்கள் நாட்டில் இல்லை. அவர்­களை வெளி­யேற்­றி­ய­தாக அமைச்­சர்கள் பகி­ரங்­க­மாக தெரிவித்து வந்தனர். அப்படியானால் இவர்கள் இருப்பது அரசாங்கத்துக்கும் தெரியாது, நாட்டின் புலனாய்வுத்துறைக்கும் தெரியாது. அரசாங்கம் செய்த தவறை மறைப்பதற்கே தேரர்களை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர் என்றார்.

Comments