மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!


மரக்கறிகளின் விலைகள் பத்து வீதத்தினால் திடீரென உயர்வடைந்துள்ளது.

மரக்கறி வகைகள் கிடைப்பதில் காணப்படும் தாமதத்தினால் இவ்வாறு விலைகள் உயர்வடைந்துள்ளன.

தற்பொழுது மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, போதியளவு மரக்கறி வகைகள் கிடைக்கப் பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும், நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் இவ்வாறு திடீரென விலை உயர்வு பதிவாகியுள்ளது.

Comments