திருகோணமலை மாவட்டத்தை எதிர்காலத்தில் அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல வேண்டும் -அப்துல்லா மஹ்ரூப்
திருகோணமலை மாவட்டத்தை எதிர்காலத்தில் வரையறுக்கப்பட்ட அபிவிருத்திக்கு இட்டு செல்ல வேண்டும் மென்றால் வட்டாரம் தொகுதிமுறைமையினால் மாத்திரமே இட்டுசெல்ல முடியும்.
எமது மாவட்டத்தில் மூவின மக்களும் ஒற்றுமையுடன் சினேக பூர்மாக ஒரே தாய் மக்கள் போன்று வாழ்கின்ற இவ் கால கட்டத்தில் எமது நாட்டின் ஜனாதிபதி மைத்திபால சிரிசேன முன்னெடுத்த இவ் வட்டார தொகுதி முறைமையின் காரணமாக எமது மாவட்டம் மூன்று பிரிவுகளால் பிரித்து உள்ளதால் எம்முடைய மக்களுடை நீண்ட நாள் அபிலாசைகள் எமது இளைஞ்ஞர்களின் பிள்ளைகளின் தேவைகளை இப்போதுதான் நிவர்த்தி செய்யக் கூடியதாக உள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் நேற்று முள்ளிப்பொத்தானையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.
எமது மக்கள் பல வருடங்கள் வாக்களித்து வெறும் கையை பார்த்தவர்களாக காணப்பட்டார்கள் இனிமேலும் அவ்வாறு நடைபெற இடமளிக்க கூடாது எம்முடைய மக்கள்
கடந்த 30வருடங்கள் நடைபெற்ற யுத்தத்தில் சொத்து சுகம் காணி உடைமைகளை இழந்தவர்களாகவும் காணப்பட்டனர். அவ்வாறிருந்த போதிலும் எம்மக்கள் உரிமைகளை பெற்றவர்களாக அபிவிருத்தி காணதவர்களாக காணப்படுகின்றார்கள்.
தற்போது நமக்கு என்று ஒரு நல்ல திறமையுடைய 2002ஆண்டளவில் எமது மண்ணில் சேவை செய்த யுக தக்மா என்ற கைத்தொழில் சந்தையை நடாத்திய மதிப்புகுறியவருமான
அமைச்சாராக இருந்த ரோஹித்த போகொல்லாகம அவர்கள் ஆளுனராக இருக்கின்றார் உங்களுக்கு தெரியும் நம்முடைய மாவட்டத்தில் காணப்படும் கப்பல் துறை பிரதேசத்தில் உள்ள 5000ஏக்கர் காணியை மீட்டெடுக்க போராடிய பெருமைகுறியவர் ஆளுனர்தான் அக்காணிகளை மீட்டெடுக்கும் தருணத்தில் தான் முன்னால்ஜணாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சதியினால் தான் அந்த காணிகள் பரிபோனது.
எனவே இவ்வாரண காணி பிரச்சினை அபிவிருத்தி பிரச்சினை இனிமேல் இடம்பெறாது எனக்கு வாக்குறு அழித்துள்ளார் எனவே எம்முடைய மாவட்டத்தின் தொகுதி முறைமையினால் கைவிடப்பட்ட சமுகமாக தேவையான பல வசதி வாய்ப்புக்களைக் கொண்டு காணப்படுவதுடன், அதிகமாக பயன்படுத்தப்படாத காணிகள் வெறுமனே இருக்கின்றமையானது, அபிவிருத்தி க்கு உந்து சக்தியாக அமைகின்றது என, பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க. அதிபர் முன்னால் காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி பிரதேச செலாளர்கள் பிரதேச சபை செயலாளர்கள் இன்னும் பல முக்கியஸ்த்தர் கலந்து கொண்டு நடைபெற்றப்போது பாரளுமன்ற உறுப்பினர் இதைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தி விடயத்தில் விவசாயிகள்
உங்களுடைய பங்களிப்பை வழங்குதல் வேண்டும். விசேடமாக விவசாயம் இப்போது தன்னிரைவையும் விலைச்சலை அதிகம் விலை அதிகம் என்ற படியால் நாம் அபிவிருத்தியில் இணைந்து செயற்படல் மற்றும் விவசாயத்தை திட்டம் மிட்டு ஆரம்பிப்பதன் மூலம் இவ் விவசாயத்தை நஞ்ஞற்ற நாடு எனும் செயற் திட்டத்தை மேலும் வலுவுள்ளதாக மாற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.


Comments
Post a Comment