தனியலகு கோரிக்கை முட்டாள்தனமானது

ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர்

வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டால் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யான அலகு உரு­வாக்­கப்­பட வேண்டும் என கோரு­வது ஆபத்­தா­ன­தாகும். இது ஒட்­டு­மொத்த இலங்கை முஸ்­லிம்­க­ளையும் குர்பான் கொடுக்கும் முட்­டாள்­த­ன­மான முயற்­சி­யாகும் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம். ஸுஹைர் தெரி­வித்தார்.

 1987 இல் இருந்த நிலை­மைக்கும் தற்­போ­துள்ள நாட்டின் நிலை­மைக்­கு­மி­டையில் பாரிய வேறு­பா­டுள்­ளது. இதனை மனதில் கொண்டே முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் தமது கருத்­துக்­களை முன்­வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டால் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யான அலகு உரு­வாக்­கப்­பட வேண்டும் எனும் தமது கட்­சியின் நிலைப்­பாட்டில் மாற்­ற­மில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறி­யி­ருப்­பது தொடர்பில் கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸுஹைர் மேலும் கருத்து வெளி­யி­டு­கையில்,  புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான முயற்­சிகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வதை நாம் அறிவோம். எனினும் இது தொடர்பில் இறுதித் தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இன்னும் கலந்­து­ரை­யாடல் மட்­டத்­தி­லேயே இவை உள்­ளன. இந் நிலையில் நாம் முஸ்­லிம்­க­ளுக்­கான தனி­ய­லகு பற்றி பகி­ரங்­க­மாக ஊட­கங்கள் வாயி­லாக கோரிக்­கை­களை முன்­வைப்­பது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத, மத­வாத அலையைத் தோற்­று­விக்­கவே வழி­வ­குக்கும். இது முஸ்லிம் சமூ­கத்­தையே குர்­பான கொடுப்­ப­தற்கு ஒப்­பா­ன­தாகும். 

வடக்கு, கிழக்கு இணைப்பு பற்­றிய விட­யங்கள், சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளோடு ஆழ­மாக கலந்­து­ரை­யாடி தீர்­மா­னிக்­கப்­பட வேண்­டி­ய­வை­யாகும். இதில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன என்­பது இது­வரை தெ ளிவு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் நாம் முந்திக் கொண்டு தனி­ய­லகு கோரிக்­கையை முன்­வைக்க கூடாது. 

இந்தக் கோரிக்கை பெரும்­பான்மை சிங்­கள மக்கள் மத்­தியில் தப்­ப­பிப்­பி­ரா­யங்­களைத் தோற்­று­விக்­கவும் அவர்­க­ளு­ட­னான முஸ்­லிம்­களின் நீண்ட கால உறவில் பாதிப்பை ஏற்­ப­டுத்­த­வுமே வழி­வ­குக்கும். 

ஜே.ஆர்.ஜய­வர்­தன ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது இலங்கை – இந்­திய ஒப்­பந்தம், 1987 ஜூலையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. அப்­போது முஸ்­லிம்­க­ளிடம் இது தொடர்பில் கருத்­துக்கள் எதுவும் பெற்­றி­ருக்­க­வில்லை. இதன்­மூலம் இணைப்பை ஏற்றுக் கொள்ள முஸ்­லிம்கள் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டார்கள். 

அதே­நேரம் சிங்­களப் பொது­மக்­களும் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்­கின்­றனர். கிழக்கு மாகா­ணத்தில் வாழும் தமி­ழர்­களும் கூட இணைப்­புக்கு எதி­ராக உள்­ளனர். கிழக்கில் தமி­ழர்கள் 40 வீதமே உள்­ளனர். ஏனைய 60 வீத­மானோர் தமி­ழர்கள் அல்ல. 

மேலும் முஸ்­லிம்கள் வடக்கு கிழக்கு இணைப்பை விரும்­பு­கின்­றார்­களா என்ற கேள்­வியை விட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு போன்ற கட்­சிகள் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன என்­பதை தெளி­வாக தெரிந்து கொள்­ளு­தலே முக்­கி­ய­மாகும். இன்­றைய சூழல்­நி­லையில் தனியலகு கோரிக்கைகள் இனவாத கலவரத்திற்கு விதைத்திடலாம். 

எனவே, இன்னுமொரு இனக் கலவரத்துக்கு அடிகோலாமல் இரு மாகாணங்களுக்கும் தேவையான சாத்தியமான அளவு அதிகாரப் பரவலாக்களைப் பெற்று நாட்டில் அனைவரும் சுமுகமாக வாழும் ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments