ஹஸன் அலியின் சகோதரர் பயணித்த வாகனம் விபத்து
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் காரொன்றும் பஸ் வண்டியொன்றும் மோதியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காரில் பயணித்த இருவரும் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் படுகாயமடைந்த ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹஸன் அலி மற்றும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் ஆகியோரின் சகோதரரான நிந்தவூர் பகுதியைச்சேர்ந்த எம்.டி.ஜப்பார் அலி (57வயது) எனவும் தெரியவருகின்றது.
கிண்ணியாவிலிருந்து மூதூர் பயணித்த பஸ் வண்டியும் நிந்தவூரிலிருந்து வந்த காரும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம் பெற்றதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.


Comments
Post a Comment