காட்டு யானை கூட்டம் அட்டகாசம். பாதையில் சென்றுகொண்டிருந்த வாகனத்தை வழி மறித்து தாக்கியதில் நால்வருக்கு பலத்த காயம்

Ariff S Naleem

திம்புளாகலையில் சம்பவம். காயங்களுயுள்ளானவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதி. -

யானை தாக்கியதில் நால்வருக்கு பலத்த காயம்,மின்னல் தாக்கி ஒருவர் பலி. பொலன்னறுவையில் சம்பவம். காட்டு யானைக்கூட்டம் பாதையில் சென்றுகொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துத் தாக்கியதில் குறித்த வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த நால்வர் படு காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை அருணகங்வில எனும் இடத்தில் வயல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது நேற்று மின்னல் தாக்கியதில் குறித்த விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.

Comments