முஸ்லிம் தலைமைகளுடன் உலமா சபை சந்திப்பு
யாப்பு, எல்லை நிர்ணயம் குறித்து ஆராய்வு
புதிய அரசியலமைப்பில் வட கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் உட்பட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒற்றுமைப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், புதிய அரசியலமைப்பில் முஸ்லிம் சமூகம் தொடர்பாக உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள், முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றினைத் தயாரிப்பதற்கென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நியமித்துள்ள உலமாக்கள், புத்திஜீவிகள் அடங்கிய குழு கடந்த வாரம் முஸ்லிம் அரசியல் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. குறித்த பேச்சுவார்த்தையின்போது புதிய அரசியல் அமைப்பு, மாகாண எல்லை நிர்ணயம் என்பன தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒருமித்து செயற்படுவதென தீர்மானித்தனர்.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்தில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலைமையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ பிரதியமைச்சர் பைசல் காசிம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அமீர் அலி, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள், புதிய அரசியலமைப்பு மற்றும் மாகாண எல்லை நிர்ணயம் என்னும் விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தனித்துச் செயற்படாது தனித் தனியாக தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் முன்வைக்காது ஒருமித்து செயற்பட வேண்டும் என முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்தது.
ஒவ்வோர் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தமது அரசியல் கொள்கைகளைப் புறந்தள்ளி சமூகம் சார்ந்த விடயங்களில் ஒருமித்து ஒரே இலக்குடன் செயற்பட வேண்டும் எனவும் உலமா சபை முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தது.
புதிய அரசியலமைப்பிலும் மாகாண எல்லை நிர்ணயத்திலும் முஸ்லிம் சமூகத்துக்கு பாதகமான விடயங்கள் இடம்பெற்று விடக் கூடாது என்பதில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
வில்பத்து விவகாரத்திலும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருக்காது ஒன்றுபட வேண்டுமெனவும் உலமா சபை முஸ்லிம் அரசியல் தலைவர்களை வேண்டியது. குர்ஆன் ஹதீஸின் வழிகாட்டலுக்கமைய சமூக நலனுக்காக ஒன்றிணைய வேண்டும் பிரிந்து நிற்கக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
உலமா சபையின் அறிவுரைகளையும் கருத்துகளையும் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியின் தலைமையில் விரைவில் ஒன்றுகூடி இது தொடர்பில் கலந்துரையாடி தமது ஏகோபித்த கருத்துகளை முன்வைப்பதாக உறுதியளித்தார்கள்.
முஸ்லிம் அரசியல் தலைமைகளின் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கருத்துகளையும் பெற்று உலமா சபை அறிக்கையொன்றினைத் தயாரித்து அரசியலமைப்பு வழி நடத்தல் குழுவிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியலமைப்பில் வட கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் உட்பட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒற்றுமைப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், புதிய அரசியலமைப்பில் முஸ்லிம் சமூகம் தொடர்பாக உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள், முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றினைத் தயாரிப்பதற்கென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நியமித்துள்ள உலமாக்கள், புத்திஜீவிகள் அடங்கிய குழு கடந்த வாரம் முஸ்லிம் அரசியல் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. குறித்த பேச்சுவார்த்தையின்போது புதிய அரசியல் அமைப்பு, மாகாண எல்லை நிர்ணயம் என்பன தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒருமித்து செயற்படுவதென தீர்மானித்தனர்.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்தில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலைமையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ பிரதியமைச்சர் பைசல் காசிம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அமீர் அலி, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள், புதிய அரசியலமைப்பு மற்றும் மாகாண எல்லை நிர்ணயம் என்னும் விடயங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தனித்துச் செயற்படாது தனித் தனியாக தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் முன்வைக்காது ஒருமித்து செயற்பட வேண்டும் என முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்தது.
ஒவ்வோர் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தமது அரசியல் கொள்கைகளைப் புறந்தள்ளி சமூகம் சார்ந்த விடயங்களில் ஒருமித்து ஒரே இலக்குடன் செயற்பட வேண்டும் எனவும் உலமா சபை முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தது.
புதிய அரசியலமைப்பிலும் மாகாண எல்லை நிர்ணயத்திலும் முஸ்லிம் சமூகத்துக்கு பாதகமான விடயங்கள் இடம்பெற்று விடக் கூடாது என்பதில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
வில்பத்து விவகாரத்திலும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருக்காது ஒன்றுபட வேண்டுமெனவும் உலமா சபை முஸ்லிம் அரசியல் தலைவர்களை வேண்டியது. குர்ஆன் ஹதீஸின் வழிகாட்டலுக்கமைய சமூக நலனுக்காக ஒன்றிணைய வேண்டும் பிரிந்து நிற்கக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
உலமா சபையின் அறிவுரைகளையும் கருத்துகளையும் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியின் தலைமையில் விரைவில் ஒன்றுகூடி இது தொடர்பில் கலந்துரையாடி தமது ஏகோபித்த கருத்துகளை முன்வைப்பதாக உறுதியளித்தார்கள்.
முஸ்லிம் அரசியல் தலைமைகளின் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கருத்துகளையும் பெற்று உலமா சபை அறிக்கையொன்றினைத் தயாரித்து அரசியலமைப்பு வழி நடத்தல் குழுவிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment