இரண்டு தேரர்­க­ளுக்கு சி.சி.டி. இன்று அழைப்பு


சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர், அரம்­பே­பொல ரத­ன­சார தேரர் ஆகி­யோரை இன்று கொழும்பு தெமட்­ட­கொ­டையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் (சி.சி.டி.) ஆஜ­ராக உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. இன்று காலை அவர்­களை இவ்­வாறு ஆஜ­ராக உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தா­கவும், கல்­கி­சையில் கடந்த செப்­டெம்பர் 26 ஆம் திகதி ரோஹிங்ய முஸ்­லிம்கள் மீதான அத்­து­மீறல் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக அவர்கள் இவ்­வாறு அழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

கல்­கிசைப் பொலிஸ் பிரிவில் ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ், மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்ய முஸ்லிம் அக­தி­களை அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் செய்த அத்­து­மீ­றல்கள் மற்றும் தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ரணை செய்யும் பொறுப்பு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில், இந்த சம்­பவம் தொடர்பில் விசா­ரணை செய்ய குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் நிசாந்த டி சொய்­ஸாவின் நேரடி கட்­டுப்­பாட்டில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் சந்­திர­தி­லக, பிர­தான பொலிஸ் பரி­சோ­த­கரும் அந்த பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யு­மான நெவில் டி சில்­வாவின் கீழ் மூன்று குழுக்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

அவர்களின் அறிவுறுத்தல் பிரகாரமே விசாரணை அவசியம் கருதி இன்று ஆஜராகுமாறு இந்த அழைப்பு இரு தேரர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

Comments