லெபனானிலுள்ள சவுதியர்களுக்கு உடன் வெளியேறுமாறு அறிவிப்பு
லெபனானிலுள்ள சவுதியர்களுக்கு அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சவுதி அரசாங்கம் அறிவித்தல் விடுத்தள்ளது.
லெபனானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியிலிந்து இராஜினாமா செய்ததன் பின்னர் சவுதி அரேபியாவுக்குள் பிரவேசித்த லெபனான் பிரதமர் ஹரிரி கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேர் லெபனானில் தொழில்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment