அல்-மதினா பாடசாலை நுழைவாயில் பிரச்சனைக்குத் தீர்வு

Ihzana Fareed

தி/ கிண்ணியா ஈச்ச நகர் அல்- மதினா பாடசாலை நுழைவாயில் பிரச்சனை  மிக நீண்டகாலத்திற்குப் பின் தீர்த்து வைக்கப்பட்டு நேற்று   (08) கையளிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

 ஈச்ச நகர் கிராம  அபிவிருத்திச் சங்கத்தினர் முன்னின்று மக்களின் பணத்தின்  இதனை நிர்மாணித்து கொடுத்து மாணவர்கள் பட்ட சிரமத்திற்கு முற்றுப் பள்ளி வைத்துள்ளனர்.

 இதற்கென இச் சங்கத்தினர் மக்களின் உதவியின் மூலம் 25 ஆயிரம் ரூபா  பணத்தில் இதனை நிர்மாணித்துள்ளனர்.

 இந்த நுழை வாயில் சீர்கேடு தொடர்பாக இவ் வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட அரசியல் வாதிகள், பிரதேச சபை , பிரதேச செயலகம்,இது தொடர்பாக பல முறைகள் தொடர்பு கொண்டும் இதற்கான தீர்வு கிட்டவில்லை எனவும் பிரதேச வாசிகள் கவலையுன் தெரிவிக்கின்றனர்.

 இதில் மக்களின் பங்களிப்பு  பள்ளிவாயல் நிர்வாகிகள் ஒத்துழைப்புடனும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் நயீம்   உப தலைவர் முஸ்தஹீன் செயலாளர் நஸீர் பொருளாளர் றியால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


Comments