கந்தளாய் தி/ஆயிஷா மகளீர் மகா வித்தியாலயம் தேசிய மட்டத்தில் முதாலாமிடம்
திருகோணமலை கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தி/ஆயிஷா மகளீர் மகா வித்தியாலயம் 2017ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா போட்டியில் ஆரம்ப பிரிவவைச் சேர்ந்த மாணவர்கள் முதலாம் இடத்தைப்பெற்று பாடசாலைக்கும்,மாவட்டத்திற்கும் பெருமையைத் தேடித் தந்துள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் எம்.சி.நசூர்தீன் தெரிவித்தார்.
போட்டி நிகழ்சியின் வெற்றி பெற்ற மாணவர்களுடன் பாடசாலை அதிபர் எம்.சி.நசூர்தீன்,பிரதி அதிபர் எம்.எம்.எஸ்.ஹுசைன், இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் கே.எம்.ஹனிபா(மௌலவி),நெறிப்படுத்திய ஆசிரியை திருமதி ஆர்.றிஸ்வானி,மற்றும் இஸ்லாம் பாட ஆசிரியர் எம்.பி.எம்.அனிஸ் காணப்படுகின்றனர்.


Comments
Post a Comment