திருகோணமலையில் உணர்வு பூர்வமான மாவீரர் நிகழ்வு.
எப்.முபாரக்
2017-11-27.
திருகோணமலை மாவட்டத்தின் சிவன் கோவிலடியில் மாவீரர் தின நிகழ்வு இன்று (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் யுவதிகள், தாய்மார்கள் மற்றும் பெற்றோர்கள் எனப்பலரும் ஈகை சுடர் ஏற்றினார்கள்.
ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது







Comments
Post a Comment